Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

CTET-தயாரா? தமிழ்நாட்டில் கேந்திரிய பள்ளிகளின் பட்டியல்

The latest and total (37) list of KV Schools in Tamil Nadu.

Chennai
1. Chennai (CLRI)
2. Chennai (Anna Nagar)

ஒரு வருடமாக இருந்த பி.எட்., எம்.எட். படிப்புகள் 2 வருடங்களாக உயர்வு தமிழ்நாட்டில் பாடத்திட்டங்களும் தயார்

           பி.எட். மற்றும் எம்.எட். படிப்புகளின் காலம் ஒரு வருடமாக இருந்தது. அது வருகிற கல்வி ஆண்டு முதல் 2 வருடமாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை 2 வருடமாக உயர்த்தப்பட்டுள்ள பி.எட். மற்றும் எம்.எட். படிப்புக்கு பாடத்திட்டம் தயார் நிலையில் உள்ளது.

அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவதற்கு காரணம் பயிற்று மொழி அல்ல !

           அண்ணல் காந்திஜி 1937-ஆம் ஆண்டு, வார்தாவில் அகில இந்திய அளவிலான கல்வியாளர்கள், கல்வி அமைச்சர்கள் மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். அப்போது, அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாய இலவசக் கல்வி அளிக்கப்பட வேண்டும் எனவும், இத்தகைய கல்வி நன்மதிப்பை உடைய ஒரு நல்ல குடிமகனை உருவாக்குவதாக அமைய வேண்டுமெனவும் கூறினார்.

கணினி பயிற்றுநர் பணியிடங்கள் PTA மூலம் நியமனம் - ரத்து செய்து அரசாணை வெளியீடு

         பள்ளிக்கல்வி - கணினி பயிற்றுநர் பணியிடங்கள் தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் பெற்றோர் ஆசிரியர் கழக மூலம் தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் நியமனம் செய்துகொள்ள அனுமதித்து வெளியிடப்பட்ட அரசாணை ரத்து செய்து அரசாணை வெளியீடு 

மாணவியை கொன்றது எப்படி? மாணவன் பரபரப்பு வாக்குமூலம்

          ஆறாம் வகுப்பு மாணவியை கொன்றது பற்றி, 10ம் வகுப்பு மாணவன் கொடுத்த வாக்குமூலம், போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டம், மாச்சனூர் அரசு பள்ளி, ஆறாம் வகுப்பு மாணவியை கொலை செய்த, அதே பள்ளி, 10ம் வகுப்பு மாணவனை, போலீசார், ஓசூரில் கைது செய்தனர்.


மூன்றாவது முறையாக தொடக்கக் கல்வித்துறையில் மீண்டும் ஒரு பதவி உயர்வு வாய்ப்பு . . .

         புதியதாக தொடங்கப்பட்டுள்ள 128 தொடக்கப்பள்ளிகளில் தலைமையாசிரியர் பணியிடங்களும் 42 நடுநிலைப்பள்ளிகளில் 42 தலைமையாசிரியர்கள், 126 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கும், அலகு விட்டு அலகு மாறுதலில் ஏற்பட்ட காலிப்பணியிடத்திற்கும் மீண்டும் ஒரு பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த வேண்டும் என தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் ஐபெட்டோ அகில இந்திய செயலாளர் தொடக்கக் கல்வி இயக்குநரிடம் வேண்டுகோள் விடுத்தார்.
 

அரசுப்பள்ளிகளின் 10, 12ம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு விடைத்தாள்கள் பொதுத்தேர்வைப்போல மைய மதிப்பீட்டு முறையில் திருத்தம்

          அரசுப்பள்ளிகளின் 10, 12ம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு விடைத்தாள்கள் பொதுத்தேர்வைப்போல மைய மதிப்பீட்டு முறையில் திருத் தும் பணி நேற்று துவங்கியது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆர்வம் ஏற்படுத்தப்படுமா?

            உயர் கல்வியில் விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டிற்கு வழங்கப்படும் மதிப்பெண் குறித்து, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

DSE - BT TO PGT PANEL 2015

           தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப்பணி - 2015-16ம் கல்வியாண்டில் அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலையாசிரியர் 01.01.2015 நிலவரப்படி பணிமாறுதல் மூலம் முதுகலையாசிரியராகப் பதவி உயர்வு அளிக்க தகுதிவாய்ந்தோர் பட்டியல் தயாரித்தல் சார்பான விவரம் கோரி இயக்குனர் உத்தரவு

தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் தலைமை ஆசிரியர் நியமிக்க பொதுக்குழுவில் கோரிக்கை.

             தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம், தஞ்சை அரசர் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. மாவட்ட தலைவர் ரங்கராசு தலைமை வகித்தார். 

உதவித் தொகைக்கான விண்ணப்பங்கள் டிமாண்ட் ! : ஆதிதிராவிட மாணவ, மாணவியர் தவிப்பு

            தமிழக அரசின் சிறப்பு உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பம் இல்லாத காரணத்தினால், மாவட்டத்தில் 14 ஆயிரம் ஆதிதிராவிட மாணவ, மாணவிகள் தவித்து வருகின்றனர். தமிழகத்தை அனைத்து துறையிலும் முதன்மை மாநிலமாக மாற்றிட தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக கல்விக்கு முன்னுரிமை அளித்து சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று உயர் கல்வியைத் தொடர தமிழக அரசு சிறப்பு உதவித் தொகை வழங்கி வருகிறது.

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வீரமணி மருத்துவமனையில் அனுமதி

           தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி தனியார் மருத்துவமனையில் புதன்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

9-ஆம் வகுப்பு முதல் மாணவர்களுக்கு "பேண்ட்': கல்வித் துறை உத்தரவு

           பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு முதல் மேல்படிப்பு படிக்கும் மாணவர்கள் அனைவரும் பேண்ட் அணிய வேண்டும் என கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு

              மத்திய உளவுத்துறை எச்சரிக்கையின் விளைவாக, தமிழகத்தில் பள்ளிகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது. இது குறித்த விவரம்: பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள ராணுவ பள்ளிக்கூடத்துக்குள் தலிபான் தீவிரவாதிகள் செவ்வாய்க்கிழமை புகுந்து கொடூர தாக்குதல் நடத்தினர். இத் தாக்குதலில் அங்கு 132 பள்ளிக் குழந்தைகள் இறந்தனர்.

ஜனவரி 12ல் பிஎப் முகாம்

               சென்னை மண்டல பி.எப் சிறப்பு முகாம் வரும் ஜனவரி 12ம் தேதி ராயப்பேட்டை அலுவலகத்தில் நடைபெறுகிறது. மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (பி.எப்) ஆணையர் எஸ்.டி.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கை:
 

தபால் வழியில் பிஇ படிப்பிற்கு இணையான படிப்பு

        தூத்துகுடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே கீழ அருணாச்சலபுரத்தில் செயல்பட்டுவரும் இந்தியன் ஆர்ட்ஸ் கல்லூரியில் AMIE படிப்பிற்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இப்படிப்பானது AICTE ஆல் அங்கீகரிக்கப்பட்ட பிஇ பட்டப்படிப்பிற்கு இணையானதாகும்.
 

கல்வி தொடர்பான மாநில கருத்தரங்கு இன்று தொடக்கம்

              வகுப்பறைகளில் கல்வி தொடர்பான 2 நாள் மாநில கருத்தரங்கு சென்னையில் வியாழக்கிழமை தொடங்குகிறது. வகுப்பறைகளில் சிறந்த கல்வி முறைகள் மூலம் 21-ஆம் நூற்றாண்டின் குடிமக்களாக குழந்தைகளை உருவாக்குவது என்ற தலைப்பில் இந்தக் கருத்தரங்கு நடைபெற உள்ளது.

சமையல் எரிவாயு மானியம் பெற இனி ஒரு விண்ணப்பம் மட்டும் போதும்

           சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டத்தில் இணைவதற்கு இனி ஒரே ஒரு விண்ணப்பத்தை மட்டும் பூர்த்தி செய்து கொடுத்தால் போதும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய அறிவிப்பு குறித்து இந்திய எண்ணெய் நிறுவனத்தின் (ஐ.ஓ.சி.) செயல் இயக்குநர் யு.வி.மன்னூர் சென்னையில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியது:

108 ஆம்புலன்ஸ் வேலைவாய்ப்பு முகாம்

          தமிழக அரசின் 108 ஆம்புலன்ஸ் சேவையில் பணியாற்றுவதற்கான வேலைவாய்ப்பு முகாம் சென்னையில் டிசம்பர் 22-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அவசர கால மருத்துவ உதவியாளர்,ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநர் ஆகிய பணியிடங்களுக்கான ஆள் எடுப்பு முகாம் கோயம்பேட்டில் உள்ள புனித தாமஸ் கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெறும்.

10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை அந்தந்தப் பள்ளியிலேயே நடத்த மதுரைக்கிளையில் மனு.

              10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை அந்தந்தப் பள்ளியிலேயே எழுத அனுமதிக்க வேண்டும் என மதிமுக மாணவர் அணி மாநிலச் செயலாளர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுதாக்கல் செய்துள்ளார். 

தலைமையாசிரியர்கள் மாவட்ட கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு பெறும்போது தனிஊதியம்(PP) ஊதிய நிர்ணயத்திற்கு அனுமதிப்பது சார்ந்து நிதித்துறையின் தெளிவுரை கடிதம்

           பள்ளிக்கல்வி - உயர்நிலை /மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மாவட்ட கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு பெறும்போது தனிஊதியம்(PP) ஊதிய நிர்ணயத்திற்கு அனுமதிப்பது சார்ந்து நிதித்துறையின் தெளிவுரை கடிதம்

கஜினி முகமதுவின் 17 படையெடுப்புகள்....

1.கி.பி.1000...இந்தியாவின் செல்வப்புற நகரம்....
2.கி.பி.1001...பெசாவர்..ஜெயபா
லன்

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive