Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 09.11.21

   திருக்குறள் :

பால் :பொருட்பால். 

இயல்: அரசியல். 

அதிகாரம்: தெரிந்து செயல் வகை. 

குறள் எண்: 467 

குறள்:
எண்ணித் துணிக கருமந் துணிந்தபின்
எண்ணுவ மென்ப திழுக்கு. 

பொருள்:
நன்றாகச் சிந்தித்த பிறகே செயலில் இறங்க வேண்டும்; இறங்கிய பிறகு சிந்திக்கலாம் என்பது தவறு.

பழமொழி :

Ask and it shall be given


அழுத குழந்தை பசியாரும்

இரண்டொழுக்க பண்புகள் :

1. உங்களை அழகாக்குவது
உங்களின் புன்னகை. புன்னகையுடன் இந்நாளை எதிர் கொள்ளுங்கள்.


2. உங்கள் அன்பு உள்ளங்களை வெல்லும் அனைவரிடமும் நேசத்துடன் பழகுங்கள்.

பொன்மொழி :

ஒரு சிந்தனைக்காக ஒரு தனி மனிதன் இறக்கலாம், எனினும் அவனது சிந்தனைகள் அவன் மரணத்திற்கு பிறகும் ஆயிரம் உயிர்களிடம் விதைக்கப்பட்டிருக்கும் ----- நேதாஜி

பொது அறிவு :

1. உலகின் ஆழமான குழி எது? 

பசிபிக் பெருங்கடலில் உள்ள மரியானா ஆழ் குழி 

2. ஜப்பானின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் நகரம் எது? 

ஒலஸ்கா

English words & meanings :

1. No room to swing a cat - not big enough, சிறிய இட‌ம் 


2. Rain cats and dogs - rain heavily. அதிகமான அளவில் மழை

ஆரோக்ய வாழ்வு :

வைட்டமின் “சி” நிறைந்த உணவுகள்

முதுகுத் தண்டிலும் இரத்த அணுக்களிலும் வைட்டமின் சி அதிகம் கலந்துள்ளது. நம் உடலில் எல்லாத் திசுக்களிலும் இது உள்ளது. உடல் துன்பத்தையும் மனத் துன்பத்தையும் ஒருவர் தாங்கிக் கொண்டு உழைத்தால் அவர் உடலில் வைட்டமின் “சி” சரியான அளவில் இருக்கிறது என்று அர்த்தம். நம் உடலை எப்பொழுதும் உற்சாகமாக வைத்துக் கொள்கிறது வைட்டமின் “சி”. இதனை நாம் ஆரஞ்சுசாறு, கொய்யா, நெல்லிக்காய் முதலியவற்றிலிருந்து எளிதாகப் பெறலாம். இதில் வைட்டமின் “சி” அதிகம் உள்ளது. இது தவிர தினமும் ஒரு கப் கொண்டைக் கடலை, அல்லது கடலை பருப்பு சுண்டல் சாப்பிடலாம். காலையில் இட்லி, தோசைக்கு சட்னியாக பச்ச மிளகாய் அல்லது காய்ந்த மிளகாய் சேர்த்த தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னி செய்து சாப்பிடலாம். இதிலும் வைட்டமின் “சி” இருக்கிறது.

நீரழிவு நோயாளிகள் ஊற வைத்த கொண்ட கடலையினை வேக வைத்து தினமும் சாப்பிட்டால் எளிதாக உடலுக்கு சக்தி கிடைக்கும். முட்டை கோஸ் சூப், பாசிப் பருப்பு பாயாசம், முளை விட்ட பச்சபயிறு சாலட் இதிலும் வைட்டமின் “சி” அதிகமாக இருக்கிறது. தினமும் காலைசூப், ஆரஞ்சுஜூஸ், சுண்டல் சாப்பிடுவதால் உடலுக்கு உடனடியாக சக்தி கிடைக்கிறது.

கணினி யுகம் :

Ctrl + ] - Increase selected font +1. 

Ctrl + shift + > - Increase selected font +1.

நவம்பர் 09

அப்துல் ரகுமான் அவர்களின் பிறந்தநாள்... 




அப்துல் ரகுமான்,(நவம்பர் 91937 - சூன் 22017), தமிழ்நாட்டைச் சேர்ந்த கவிஞரும், தமிழ்ப்பேராசிரியரும் ஆவார். கவிக்கோ என்று சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறார். 'வானம்பாடி' இயக்கக் கவிஞர்களோடு இணைந்தியங்கியவர். அவர் பால்வீதி என்ற கவிதைத் தொகுதி மூலம் தம்மை ஒரு சோதனைப் படைப்பாளியாக இனங்காட்டிக் கொண்டார். அத்தொகுதி வெளிவந்த போது கவிதையை நேரடியாகத் தராமல் உவமைகள், உருவகங்கள், படிமங்கள், குறியீடுகள் ஆகியவற்றின் வழி வெளியீட்டு முறையை அமைத்துக் கொண்டார். தமிழில் கவிதைக் குறியீடுகள் குறிந்து ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றவர்.  ஆலாபனை கவிதைத் தொகுப்புக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர். 


கே. ஆர். நாராயணன் அவர்களின் நினைவுநாள்  




கே. ஆர். நாராயணன் என்று அறியப்படும் கொச்செரில் ராமன் நாராயணன் (பிறப்பு - கோட்டயத்தில் உள்ள உழவூர் (கேரளா), அக்டோபர் 271920; இறப்பு - புது தில்லிநவம்பர் 92005) பத்தாவது இந்தியக் குடியரசுத் தலைவர் ஆவார். இவர் இப்பொறுப்பை வகித்த ஒரே மலையாளிஆவார். முன்னர் இவர் இந்திய வெளியுறவுத் துறையில் அதிகாரியாக பணியாற்றியவர்.


அர்கோபிந்த் குரானா அவர்களின் நினைவுநாள்  





அர்கோபிந்த் குரானா, அல்லது ஹர் கோவிந்த் குரானா (Har Gobind Khoranaஇந்திहरगोविंद खुरानाசனவரி 91922 - நவம்பர் 92011) ஓர் இந்திய அமெரிக்க மூலக்கூற்று உயிரியல் அறிவியலாளர் ஆவார். மரபுக்குறியீடு (genetic code) பற்றியும் புரதத்தை செயற்கையாக உற்பத்தி செய்வதில் மரபு குறியீட்டின் பங்கு குறித்த ஆராய்விற்காக 1968ஆம் ஆண்டு மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபெல் பரிசினை மார்சல் நோரென்பர்க்இராபர்ட் ஹாலி ஆகியோருடன் பகிர்ந்து பெற்றவர். 1966ஆம் ஆண்டு அமெரிக்காவின் இயல்பான குடிமகனான இவருக்கு தேசிய அறிவியல் பதக்கம் கொடுக்கப்பட்டது.

நீதிக்கதை

அதிசயக்குதிரை

கிருஷ்ண தேவராயரின் படைகளுள் குதிரைப் படையும் ஒன்று. குதிரைப்படையும் வலிமையுள்ளதாக இருந்தது சண்டை இல்லாத காலங்களில் குதிரைகளைப் பராமரிக்க மந்திரிகளில் ஒருவர் ஒரு யோசனை சொன்னர். 

அதாவது ஒரு வீட்டிற்கு ஒரு குதிரையையும் அதற்குத் தீனி போடுவதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையும் கொடுக்கப்பட்டு வந்தது. அத்தொகையைப் பெற்றுக்கொண்டு குதிரையை நன்கு ஊட்டமளித்து வளர்த்தனர். 

அதே போல் தெனாலிராமனுக்கும் ஒரு குதிரை கொடுக்கப்பட்டது. ஆனால் தெனாலிராமனோ ஒரு சிறிய கொட்டகையில் குதிரையை அடைத்து வைத்து புல் போடுவதற்கு மட்டுமே ஒரு சிறிய தூவாரம் வைத்திருந்தான். அந்த துவாரத்தின் வழியாக புல்லை. நீட்டியவுடன் குதிரை வெடுக்கென வாயால் கௌவிக் கொள்ளும் மிகவும் சிறிதளவு புல் மட்டுமே தினமும் போட்டு வந்தான். அதனால் அக்குதிரை எலும்பும் தோலுமாக நோஞ்சாணாக இருந்தது. 

குதிரைக்குத் தீனி வாங்கிப் போடும் பணத்தில் தெனாலிராமன் நன்கு உண்டு கொழுத்தான். 

ஒரு நாள் குதிரைகள் எப்படி இருக்கின்றன என்று காண அனைவருக்கும் செய்தி அனுப்பி குதிரைகளை அரண்மனைக்கு அழைத்து வர உத்தரவிட்டார் மன்னர். அதன்படி குதிரைகள் அனைத்தும் அரண்மனைக்குக் கொண்டு வரப்பட்டன மன்னர் குதிரைகளைப் பார்வையிட்டார். குதிரைகள் அனைத்தும் மிக திருப்திகரமாக இருந்ததால் மன்னர் மகிழ்ச்சியடைந்தார். 

அங்கிருந்த தெனாலிராமனை அழைத்து உன் குதிரையை ஏன் கொண்டு வரவில்லை என மன்னர் கேட்டார். அதற்கு தெனாலிராமனோ என் குதிரை மிகவும் முரட்டுத்தனமாக இருக்கிறது. அதை என்னால் அடக்க முடியவில்லை. அதனால் தான் இங்கே கொண்டு வர வில்லை என்றான். குதிரைப்படைத் தலைவரை என்னுடன் அனுப்புங்கள். அவரிடம் கொடுத்தனுப்புகிறேன் என்றான் இதை உண்மையென்று நம்பிய மன்னர் குதிரைப்படைத் தலைவனை தெனாலிராமனுடன் அனுப்பினார். 

குதிரைப்படைத் தலைவருக்கு நீண்ட தாடியுண்டு. குதிரைப் படைத்தலைவரும் அந்த துவாரத்தின் வழியாக குதிரையை எட்டிப் பார்த்தார். உடனே குதிரை அது புல்தான் என்று நினைத்து அவரது தாடியைக் கவ்விப் பிடித்துக் கொண்டது. வலி பொறுக்கமாட்டாத குதிரைப் படைத்தலைவர் எவ்வளவோ முயன்றும் தாடியை குதிரையிடமிருந்து விடுவிக்க முடியவில்லை. இச்செய்தி மன்னருக்கு எட்டியது. மன்னரும் உண்மையிலேயே இது முரட்டுக் குதிரையாகத்தான் இருக்கும் என்று எண்ணி தெனாலிராமன் வீட்டுக்கு விரைந்தார். 

அங்கு குதிரையின் வாயில் குதிரைப்படைத் தலைவரின் தாடி சிக்கி இருப்பதை அறிந்து அந்தக் கொட்டகையைப் பிரிக்கச் செய்தார். பின் குதிரையைப் பார்த்தால் குதிரை எலும்பும், தோலுமாக நிற்பதற்குக் கூட சக்தியற்று இருந்ததைக் கண்டு மன்னர் கோபங்கொண்டு அதன் காரணத்தைத் தெனாலிராமனிடம் கேட்டார். அதற்குத் தெனாலிராமன் இவ்வாறு சக்தியற்று இருக்கும் போதே குதிரைப் படைத்தலைவரின் தாடியை கவ்விக்கொண்டு விடமாட்டேன் என்கிறது. நன்கு உணவு ஊட்டி வளர்த்திருந்தால் குதிரைப்படைத் தலைவரின் கதி அதோகதிதான் ஆகி இருக்கும் என்றான். 

இதைக் கேட்ட மன்னன் கோபத்திலும் சிரித்து விட்டார். பின்னர் தெனாலிராமனை மன்னித்து விட்டார்.

இன்றைய செய்திகள்

09.11.21

★மேட்டூர் அணையின் நீர்மட்டம் 116 அடியாக உயர்ந்துள்ள நிலையில், நாளை முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.30 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் அணை நிலவரம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

★ஓய்வுபெற்ற பிறகும் விடுப்பு ஊதியம் பெறமுடியாமல் தவித்த ஊழியருக்கு வட்டியோடு சேர்த்து வழங்க போக்குவரத்துக் கழகத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

★கர்காடக அணைகள் திறந்துவிடப்பட்டதன் காரணமாக காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு திருச்சி மாவட்ட ஆட்சியர்  அறிவுறுத்தியுள்ளார்.

★இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 33 லட்சம் குழந்தைகளுக்கும் அதிகமாக ஊட்டச்சத்துக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 18 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் தீவிரமான ஊட்டச்சத்துக் குறைவால் பாதி்க்கப்பட்டுள்ளனர் என்று மத்திய மகளிர் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

★13 ஆண்டு இடைவெளிக்கு பிறகு இந்திய நேயர்களுக்காக ஒலிபரப்பை மீண்டும் தொடங்கும் கொழும்பு வானொலி.

★பாரிஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ்: 6-வது முறையாக பட்டம் வென்றார் ஜோகோவிச்.

★பெண்கள் ஆசிய கோப்பை கால்பந்து: பிரேசிலுக்கு சுற்றுப்பயணம் செல்கிறது இந்திய அணி.


Today's Headlines

 ★ As the water level of the Mettur Dam rises to 116 feet, it is expected to reach full capacity tomorrow. A 30 members team is formed to observe the condition of Dam. 

 ★ The High Court has ordered the Transport Corporation to pay the leave salary along with interest to a retired employee, who did not get it. 

 ★ Trichy District Collector has advised people who live near River Bank to move to safer places as there is a possibility of flood in Cauvery due to the opening of Karnataka dams.

 ★ In total, more than 33 lakh children in India are suffering from malnutrition.  Of these, more than 18 lakh children are severely malnourished, according to the Federal Ministry of Child Development.

 ★ Colombo Radio is resuming its broadcasting for Indian viewers after a big gap of 13 years.

 ★ Paris Masters International Tennis: Djokovic wins the title for the 6th time.

 ★ Women's Asian Cup Football: The Indian team goes on tour to Brazil.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 08.11.21

   திருக்குறள் :

பால்: பொருட்பால்

இயல்: அரசியல்

அதிகாரம்: தெரிந்து செயல் வகை

குறள் எண்: 466

குறள்:
செய்தக்க அல்ல செயக்கெடுஞ் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும்.

பொருள்:
செய்யக் கூடாததைச் செய்வதால் கேடு ஏற்படும்; செய்ய வேண்டியதைச் செய்யாமல் விட்டாலும் கேடு ஏற்படும்.

பழமொழி :

An evil deed has a witness in the bosom


குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. உங்களை அழகாக்குவது
உங்களின் புன்னகை. புன்னகையுடன் இந்நாளை எதிர் கொள்ளுங்கள்.


2. உங்கள் அன்பு உள்ளங்களை வெல்லும் அனைவரிடமும் நேசத்துடன் பழகுங்கள்.

பொன்மொழி :

வெற்றிப் பெறுவது எளிது ,வாய்ப்புக்காக காத்திருக்காதீர்! உமக்கான வாய்ப்பை நீயே ஏற்படுத்திக் கொள் - ---அப்துல் கலாம்

பொது அறிவு :

1. தமிழில் வெளிவந்த முதல் செய்தித்தாள் எது? 

சுதேசமித்திரன்.

 2."தங்கப் போர்வை நிலம் "என்றழைக்கப்படும் நாடு எது?

ஆஸ்திரேலியா.

English words & meanings :

Fat cat - a highly placed and paid person, உயர் பதவியில் அதிக சம்பளம் பெறும் மனிதர், 

let the cat out of the bag - reveal the secret, இரகசியம் வெளியிடுதல்

ஆரோக்ய வாழ்வு :

அதிமதுரம்






அதிமதுரம், திராட்சை இவை இரண்டையும் சமமாகப் பொடி செய்து 100 கிராம் எடுத்து தண்ணீரில் அரைத்து பாலில் கலக்கி பெண்களின் மாதவிடாய் தொடங்கிய நாள் முதல் ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான பெண்களுக்குக் கருத்தரிக்கும். கருத்தரிக்கும் வரை 3 மாதங்கள் சாப்பிட்டால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.

போதுமான அளவு தாய்ப்பால் இல்லாதவர்கள் ஒரு கிராம் அதிமதுரச் சூரணத்தைப் பாலில் கலந்து சிறிதளவு இனிப்பு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் அதிகமாகச் சுரக்கும். இதன் மூலம் குழந்தைகளுக்குக் கூடுதலாக ஊட்டச்சத்து கிடைக்கும்.

அதிமதுரம், சீரகம் சரி எடை எடுத்து பொடித்து வைத்துக் கொண்டு 20 கிராம் பொடியை 200 மில்லி தண்ணரில் போட்டுக் கொதிக்க வைத்து 100 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி காலை வேளையில் மூன்று தினங்கள் சாப்பிட்டால் கருவுற்ற பெண்களுக்கு பிரசவத்திற்கு முன்னதாக உள்ள காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கை நிவர்த்தி செய்து விடலாம்.

அதிமதுரம், தேவதாரம் இவைகள் வகைக்கு 35 கிராம் பொடி செய்து, பிறகு வெந்நீர் விட்டு நன்றாக அரைத்து, பிரசவ வலி துவங்கிய உடன் இரண்டு முறை கொடுத்தால் சுகப்பிரசவம் ஏற்படும்.

பெண்களுக்கு ஏற்படும் கருப்பைத் தொடர்பான நோய்கள் நிவர்த்தியாகும். ஆரோக்கியமான பெண்களின் மலட்டுத்தன்மை நீங்கும்.

கணினி யுகம் :

Ctrl+ Arrow right - Bring to forward , 

Ctrl + Arrow left - Send backward

நவம்பர் 08

வீரமாமுனிவர் அவர்களின் பிறந்தநாள்... 




வீரமாமுனிவர் (நவம்பர் 8, 1680 - பெப்ரவரி 4, 1747)இத்தாலி நாட்டிலுள்ள கேசுதிகிலியோன் என்னும் இடத்தில் பிறந்தார். இவரின் இயற்பெயர் - கான்ச்டன்டைன் சோசப்பு பெச்கி (Constantine Joseph Beschi). இவர் இயேசு சபையைச் சேர்ந்த குரு ஆவார். கிறித்தவ மதத்தைப் பரப்பும் நோக்கில், 1709ஆம் ஆண்டு இயேசுசபையில் குருவானபின், 1710-ஆம் ஆண்டு தமிழகத்துக்கு அதாவது அவரது 30-ஆவது அகவையில்  வந்தார். 


இவர் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் சிறப்பான பணிகளைச் செய்துள்ளார். 23 நூல்களைத் தமிழில் எழுதியதுடன், இயேசு கிறித்துவின் வாழ்க்கை தொடர்பான நிகழ்ச்சிகளையும் இயேசுவின் வளர்ப்புத் தந்தையாகிய புனித யோசேப்பின் வரலாற்றையும் தமிழ்ப் பண்பாட்டுக்கேற்ப "தேம்பாவணி" என்ற பெருங்காவியமாக இயற்றியது இவரின் தமிழ்ப் புலமைக்குச் சான்றாக உள்ளது. சுப்ரதீபக் கவிராயர் மூலம் தமிழில் புலமை பெற்றார்.


நீதிக்கதை

தூக்கணாங்குருவி

ஒரு மரத்தில் இரண்டு தூக்கணாங் குருவிகள் கூடு கட்டிக் கொண்டு வாழ்ந்து கொண்டிருந்தன. ஒரு நாள் கனமான மழை பெய்தது. கடுங்குளிர் அடிக்கத் துவங்கியது. அந்த மரத்திற்கு குளிரில் நடுங்கியபடி ஒரு குரங்கு வந்து சேர்ந்தது. குளிரில் நடுங்கியபடி இருந்த குரங்கைப் பார்த்து இரக்கப்பட்ட தூக்கணாங் குருவிகள்,

குரங்கே, உனக்குக் கை, கால்கள் இருந்தும் இப்படி மழை, குளிர், வெயில் போன்ற துன்பத்தை ஏன் அனுபவிக்க வேண்டும்?. நீ உனக்கென்று ஒரு வீடு கட்டிக் கொண்டால் இந்த துன்பமில்லாமல் இருக்கலாமே? என்றது. ஆனால் அதைக் கேட்டதும் அந்தக் குரங்குக்கு கோபம் வந்தது. 

வல்லவனான எனக்கு இந்த தூக்கணாங்குருவிகள் அறிவுரை சொல்வதா? என்று எண்ணியபடி, எனக்கு வீடு கட்டும் சக்தி இல்லை. ஆனால், நீங்கள் கட்டியிருக்கும் உங்கள்வீட்டை எப்படிப் பிரித்து எரிகிறேன் பார்? என்றபடி குருவிகளின் கூட்டைப் பிரித்தெறிந்தது.

பாவம் தூக்கணாங்குருவிகள் தகுதியில்லாத குரங்குக்கு சொன்ன அறிவுரையால் தங்கள் வீட்டை இழந்தது. தகுதியில்லாத எவருக்கும் அறிவுரை சொன்னால் இழப்பு நமக்குத்தான் என்பதை நாம் முதலில் உணர வேண்டும்.

இன்றைய செய்திகள்

08.11.21

★சென்னையில் கனமழை பாதித்த பகுதிகளில் முதல்வர் நேரில் ஆய்வு.

★செம்பரம்பாக்கம், புழல்  ஏரிகள் திறப்பு: கனமழையால் ஏரிகள் நிரம்பி வருவதால் நடவடிக்கை.

★தொடர் மழை காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள 909 ஏரிகளில், 175 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. 

★தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் நவம்பர் 11-ம் தேதி வரை பரவலாக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.


★தமிழகம் உள்பட 14 மாநிலங்களில் பெட்ரோல், டீசல் வரி குறைப்பு இல்லை: மத்திய அரசு தகவல்.


★இந்தியாவில் கரோனா வைரஸுக்கு எதிராகத் தயாரிக்கப்பட்ட பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி வழங்கியதையடுத்து, பல்வேறு நாடுகளிலும் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு மத்திய அரசு பேச்சு நடத்தி வருகிறது.

★ஐரோப்பா, மத்திய ஆசியாவில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா தொற்று உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை.

★ஜூனியர் உலக கோப்பை போட்டிக்கான இந்திய ஆக்கி அணிக்கு தமிழக வீரர் தேர்வு.

★ஹைலோ ஓபன் பேட்மிண்டன்: இந்தியாவின் லக்சயா சென் அரையிறுதிக்கு முன்னேற்றம்.

Today's Headlines

 🌸 Chief Minister inspects heavy rain affected areas in Chennai.

 🌸Sembarambakkam and Puzhal lakes are opened as the level of water is rising due to heavy rains .

 🌸 Out of 909 lakes in Kanchipuram and Chengalpattu districts, 175 lakes are completely filled due to continuous rains.

 🌸 The Indian Meteorological Department has warned of heavy rains in the coastal areas of Tamil Nadu till November 11.


 🌸 No reduction in petrol and diesel taxes in 14 states including Tamil Nadu informed by Central Government 


 🌸 The federal government is in talks to seek recognition in various countries after the World Health Organization (WHO) approved the Covaccine, a vaccine made by Bharat Biotech, of  India against the corona virus.

 🌸 Corona coronary death toll rises again in Europe and Central Asia warned by World Health Organization .

 🌸 Tamil Nadu player selected for the Indian cricket team for the Junior World Cup.

 🌸 Hilo Open Badminton: India's Laksaya Sen advanced to the semifinals.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Flash News : 4 மாவட்டங்களுக்கு கனமழை காரணமாக இரண்டு நாட்கள் ( நவ.8,9 ) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை


கனமழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் வட கடலோர மாவட்டங்களில் கனமழைபெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னரே எச்சரிக்கை விடுத்திருந்தது.



இந்த நிலையில் சென்னையில் சனிக்கிழமை இரவு முதல் ஞாயிறு காலை 5 மணிவரை இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ந்தது.



சென்னையில் அதிகப்பட்சமாக நுங்கம்பாக்கத்தில் 20 செ.மீ கனமழைபதிவாகி உள்ளது. எம்ஆர்சி நகர், அண்ணா பல்கலைகழகம், வில்லிவாக்கம், பெரம்பூர், மீனம்பாக்கம், தரமணி, நந்தனம் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்ந்தது.



சென்னை பல இடங்களில் 10 செ.மீக்கு மேல் மழை பதிவாகியுள்ளது. இதனால் நகரின் பல பகுதிகள் நீரில் மூழ்கின.



இந்த நிலையில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று அமைச்சர்களுடன் நேரில் ஆய்வு செய்தார்.

சென்னை, வேப்பேரி, பேரக்ஸ் ரோடு பகுதியை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



மழை வெள்ளத்தை வெளியேற்ற துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.



பின்னர் எழிலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்தார்.இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் ‘‘சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக வெளியூர்களில் இருந்து சென்னை வருவோர் தங்கள் பயணத்தை 3 நாட்கள் வரை ஒத்தி வைக்க வேண்டும். கனமழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள் ( , 08.11.2021 மற்றும் 09.11.2021 ) விடுமுறை அளிக்கப்படும்’’ எனக் கூறினார்

12th Tamil - 2 Marks Guide

 

 

10th English - Full Study Material

 

 

11th Tamil - Study Material

 


10th, 11th 12th - 3rd Revision Test Question Papers & Key Answer Download

10th, 11th 12th - 3rd Revision Test Question Papers & Key Answer Download
  • 10th Science - Third Revision Test 2020 - Question Paper (Thirunelveli District) | Mr. M. Sivakumar

12th Economics - Complete Study Material

 


 

PGTRB - Computer Instructor 2021 Grade 1 Exam - Exam Date, Application Form, Eligibility, Syllabus Pattern, Study Materials, Hall Ticket, Question Paper, Answer Keys, Results, cutoff Marks Download

Computer Instructor TRB Exam 2021 - Study Materials
 
PGTRB Computer Instructor Grade 1 - Tamilnadu Teachers Recruitment Board TRB conducted PGTRB Exam 2021 for Computer Instructor Grade 1  ( Post Graduate Cadre - PG Asst) for the recruitment of Computer Instructors.  Applications can be apply through only online mode.

10th Maths - Geometry Model Question Paper

 

 


12th Commerce & Accountancy - Unit Test Model Question Paper

 


 

PGTRB Economics - Model Question Paper

 

11th Chemistry - Slip Test Question Paper


 

12th Botany - Study Materials

 

 

12th Botany - Answer Keys for Refresher Course Module 2021-2022

 

 

11th Botony - Answer Keys for Refresher Course Module 2021 - 2022

 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive