தமிழ்நாடு தனியார் பள்ளிகள், கல்வி கட்டண நிர்ணயக்குழு தலைவர் பதவி காலியாக
உள்ளது.
சென்னையில் அதன் அலுவலகம், ஆறு மாதங்களாக பூட்டிய நிலையில் உள்ளது என,
தினமலர் நாளிதழில், ஜூன், 17ல் செய்தி வெளியானது. தமிழகத்தில், 12 ஆயிரம்
மெட்ரிக், நர்சரி, ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் உள்ளன.
கட்டண நிர்ணயக்குழு தலைவர் பதவி காலியாக உள்ளதால், 2016- - 17க்கு கல்வி
கட்டணம் நிர்ணயிக்கப்படவில்லை. தனியார் பள்ளிகள், தன்னிச்சையாக கட்டணம்
வசூலிக்கின்றன. தலைவரை நியமிக்க, தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனு தாக்கல் செய்திருந்தார்.
தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எஸ்.நாகமுத்து அமர்வு விசாரித்தது.
அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர், தலைவரை நியமிப்பது தொடர்பாக இறுதி
முடிவெடுக்க, மேலும், நான்கு வாரங்கள் அவகாசம் தேவை, என்றார். இதை பதிவு
செய்த நீதிபதிகள், வழக்கை பைசல் செய்தனர்.
மேலும், உறுதியளித்தபடி, கட்டண நிர்ணயக்குழு தலைவரை நியமனம் செய்தது
தொடர்பாக, நவ., 2ல் அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும்,
நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...