தசரா பண்டிகையை முன்னிட்டு உயர்நீதிமன்றத்துக்கு வரும்
அக்டோபர் 8ஆம் தேதி முதல் அக்டோபர் 16ஆம் தேதி வரை ஒன்பது நாட்கள்
விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
.
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற தலைமைப்
பதிவாளர் என்.சதீஷ்குமார் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
‘தசரா பண்டிகையை முன்னிட்டு சென்னை உயர்நீதிமன்றம் மற்றும்
உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு வரும் அக்டோபர் 8ஆம் தேதி முதல் அக்டோபர்
16ஆம் தேதி வரை ஒன்பது நாட்கள் விடுமுறை விடப்படுகிறது. இந்த விடுமுறை
நாட்களில் அவசர வழக்குகளை மட்டும் விசாரிக்க விடுமுறை கால நீதிபதிகளை தலைமை
நீதிபதி எஸ்.கே.கவுல் நியமித்து உத்தரவிட்டுள்ளார். அதன்படி அக்டோபர்
14ஆம் தேதி ஒருநாள் செயல்படும் விடுமுறை கால நீதிமன்றத்தில், சென்னை
உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.ராஜேந்திரன், என்.ஆதிநாதன் ஆகியோரும்,
மதுரை கிளையில் நீதிபதிகள் எஸ்.விமலா, கே.கல்யாணசுந்தரம் ஆகியோரும்
வழக்குகளை விசாரிப்பர். இதற்காக அக்டோபர் 13ஆம் தேதி பதிவுத்துறை
முழுமையாக செயல்படும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...