NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

NMMS Exam: 1.45 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு!

தமிழகம் முழுவதும் தேசிய வருவாய் வழி, திறன் படிப்பு உதவித் தொகை திட்டத் தேர்வு இன்று (டிசம்பர் 16) நடைபெற்றது.



பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கத்தில், திறனாய்வுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதன்படி, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகை திட்டத் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான (NMMS) திறனாய்வுத் தேர்வு டிசம்பர் 9ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

மழையால் பல்வேறு மாவட்டங்களில் பணிகள் பாதிக்கப்பட்டதால், தேர்வு டிசம்பர் 16ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அதன்படி, இன்று தமிழகம் முழுவதும் திறன் தேர்வு நடைபெற்றது. அதற்காகத் தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கட்டுப்பாட்டில், 503 மையங்கள் அமைக்கப்பட்டது. சுமார் 1,45,996 மாணவர்கள் இத்தேர்வில் பங்கேற்றனர். காலை 9.30 மணி முதல் 11.30 வரை முதல் தாள், காலை 11.30 முதல் பகல் 1 மணி வரை இரண்டாம் தாள் என இரு தாள்களாகத் தேர்வு நடைபெற்றது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive