Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

உலகத்தரம் வாய்ந்த கல்விநிறுவனம் அமைவதில் உள்ள சிக்கல்


          பார்க் கல்வி குழுமங்களின் முதன்மை செயல் அதிகாரி அனுஷா அளித்த சிறப்புப் பேட்டி:

கல்வி மேம்பாட்டை பொறுத்தே, நாட்டின் பொருளாதார வளர்ச்சி அமைகிறது.  எனவேதான், அனைத்து நாடுகளும் கல்விக்கு முக்கியத்துவம் தருகின்றன. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் போன்ற வளர்ந்த நாடுகளில் உயிர்கல்வி கற்போர் விகிதம் 50 முதல் 80 சதவீதமாக உள்ளது. இந்தியாவில் உயர்கல்வி கற்போர் 12 சதவீதம் மட்டுமே.


               எண்ணிக்கைக்காக என்றில்லாமல், கல்வி வளர்ச்சிக்காக சிறந்த தரத்துடன் புதிய உயர்கல்வி நிறுவனங்கள் அதிகளவில் துவக்கப்பட வேண்டும். இந்தியாவில் மட்டுமே ஆராய்ச்சி படிப்புகள் வரையிலும் கூட மாணவர்கள் தங்களது கல்விச் செலவுக்கு பெற்றோரை சார்ந்திருகின்றனர். அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் பட்டப்படிப்பில் இருந்தே தங்களது கல்விக்கான செலவை தாங்களே சம்பாதித்துக்கொள்கின்றனர்.
             
          ஆர்வத்தை புரிந்துகொண்டு தகுந்த துறை மற்றும் அது சார்ந்த படிப்புகளை மாணவர்களே தேர்வு செய்ய ஊக்குவிக்கப்பட வேண்டும். படிப்புகளை தேர்வுசெய்வதில் பெற்றோரின் கட்டுப்பாடு இருக்கக்கூடாது. வாழ்க்கையை தீர்மானிக்கும் திறமையை இளம் பருவத்திலேயே வளர்த்துக்கொள்ள வேண்டும்.  இந்த உலகில் அனைத்து துறைகளிலும் வாய்ப்புகள் நிறைந்திருக்கின்றன. பணிக்கான திறனை வளர்த்துக்கொள்வதே அவசியமாக உள்ளது. வாழ்க்கைக்கு தேவையான தனித்திறன் மேம்பாட்டிற்கு பள்ளியில் இருந்தே முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். 

               இளம் தலைமுறையினரிடம் தன்னம்பிக்கையை வளர்ப்பதோடு, தோல்வியை ஏற்கும் பக்குவத்தையும் இன்றைய மாணவர்களுக்கு ஊட்டுவது அவசியமாகிறது. தோல்வி என்பது சகஜமானது. தோல்விகளுக்கு பிறகு வெற்றி என்பது இயற்கையானது. அவ்வாறு கிடைக்கும் வெற்றி மகிழ்ச்சி அளிக்கக்கூடியது.

            முதல் 200 உலகின் சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலில் 10 இந்திய கல்வி நிறுவனங்கள் கூட இடம்பெறவில்லை. ஐ.ஐ.எம்., ஐ.ஐ.டி., போன்ற அரசு கல்வி நிறுவனங்கள் சில மட்டும் அதில் இடம்பெற்றுள்ளன. அதுவும் முதல் 100 சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியிலில் இடம்பெறுவது அரிதாகிறது.

              சிறந்த தரம், உள்கட்டமைப்பு வசதிகள், தொழில்நுட்பம், ஆராய்ச்சி ஆகியவற்றை பெற்று உலகத்தரம் வாய்ந்த ஒரு கல்வி நிறுவனம் உருவாக செலவும் அதிகமாகிறது. அரசு கல்வி நிறுவனங்களைப் பொறுத்தவரை, அது பெரிய பிரச்னையாக அமைவதில்லை. ஆனால், சேவை மனப்பான்மையோடு துவக்கப்படும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் அத்தகைய வசதிகளுடன் தரமான கல்வி வழங்க, அதற்குரிய கல்விக் கட்டணத்தை செலுத்த வேண்டியுள்ளது. மேலை நாடுகளைப்போல், தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் அரசு உதவி செய்யுமாயின் அது வரவேற்கத்தக்கது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive