Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இமாச்சலில் கல்லூரி மாணவிகளுக்கு பெண் போலீஸ் பாதுகாப்பு


      "இமாச்சல பிரதேசத்தில், கல்லூரி மாணவியரின் பாதுகாப்பிற்காக, ஒவ்வொரு மகளிர் கல்லூரியிலும், பெண் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர்" என, அம்மாநில முதல்வர் வீர்பத்திரசிங் கூறினார்.


           இமாச்சல பிரதேச தலைநகர் சிம்லாவில், மகளிர் கல்லூரி ஒன்றில் நடைபெற்ற விழாவில் பேசிய, முதல்வர் வீர்பத்திரசிங் கூறியதாவது: இமாச்சலில், 74 ஆயிரம் மாணவ, மாணவியர், கல்லூரிகளில் படிக்கின்றனர். இவர்களில், 45 ஆயிரம் பேர் மாணவியர். மாணவர்களின் மொத்த எண்ணிக்கையில், இது, 60 சதவீதம். இந்த எண்ணிக்கையை அதிகரிக்க, நடவடிக்கை எடுக்கப்படும்.

              நாட்டில், உயர் கல்வி பெறுவோர் எண்ணிக்கை, 15 சதவீதமாக இருக்கும் நிலையில், இமாச்சலில், இது, 23.5 சதவீதமாக உள்ளது பெருமை அளிக்கிறது. இமாச்சலில், ஊடகவியல் துறையை முன்னேற்றும் வகையில், விரைவில், ஊடகவியல் மற்றும் மக்கள் தொடர்பு படிப்புகளுக்கென, தனி பல்கலை கழகம் தொடங்கப்படும்.

         பள்ளி மாணவர்களுக்கு, இலவச பஸ் பாஸ் வழங்கப்படும். கல்லூரி மாணவியரின் பாதுகாப்பிற்காக, ஒவ்வொரு கல்லூரியிலும் பெண் போலீசார் பணியமர்த்தப்படுவர். மேலும், மாணவிகளின் உடல் நலனை கருத்தில் கொண்டு, கல்லூரிகளில், பெண் சுகாதார பணியாளர்களும், நர்சுகளும் பணி அமர்த்தப்படுவர். இவ்வாறு வீர்பத்திர சிங் கூறினார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive