தமிழ்நாட்டில் 39 பாராளுமன்ற தொகுதிக்கும்,
ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்கும் வருகிற 24–ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல்
நடக்கிறது. தேர்தலில் 845 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். ஆலந்தூர் சட்ட
மன்ற தொகுதியில் 14 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தலுக்கு இன்னும்
12 நாட்கள் உள்ளதால் வேட்பாளர்கள் தங்களது பிரசாரத்தை தீவிரப்படுத்தி
உள்ளனர்.
வருகிற 22–ந் தேதியுடன் பிரசாரம் ஓய்கிறது.
வழக்கமாக பிரசாரம் நிறைவு நாளில் மாலை 5 மணியுடன் பிரசாரம் நிறைவு பெறும்.
ஆனால், இந்த முறை 22–ந் தேதி மாலை 6 மணி வரை பிரசாரம் செய்ய தேர்தல் கமிஷன்
அனுமதி அளித்துள்ளது. இது குறித்து தலைமை தேர்தல் அதிகாரி பிரவின்குமார்
கூறுகையில்,
‘‘ஓட்டுபதிவுக்கு 48 மணி நேரத்திற்கு முன்
பிரசாரம் நிறைவு பெற வேண்டும் என்ற விதியின்படி மாலை 6 மணி வரை பிரசாரம்
செய்யலாம்’’ என்றார்.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...