Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

6 முதல் 9ம் வகுப்புகளுக்கு மே 5ம் தேதிக்குள் தேர்வு முடிவு வெளியீடு பள்ளி கல்வித்துறை உத்தரவு - தினகரன்

         அரசு உயர்நிலைப்பள்ளிகளில் அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வு முடிவடைந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு விடைத்தாள் முகாம்களுக்கு அனுப்பப்பட்ட நிலையில் ஆறாம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையும், பிளஸ் 1 வகுப்பு விடைத்தாள்களையும் அந்தந்த பள்ளிகளிலேயே மதிப்பீடு செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டது.

     வேலூர் மாவட்டத்தில் 22 ஒன்றியங்களில் 1628 தொடக்கப்பள்ளிகளும், 509 நடுநிலைப்பள்ளிகளும், 197 உயர்நிலைப்பள்ளிகளும், 208 மேல்நிலைப்பள்ளிகளும் உள்ளன.

              இதில் பிளஸ் 1 வகுப்புக்கு தகுதிவாய்ந்த முதுகலை மற்றும் தொழில் கல்வி ஆசிரியர்களை கொண்டும் உரிய ஆசிரியர்கள் இல்லையென்றால் அருகில் உள்ள பள்ளி ஆசிரியர்களை வரவழைத்தும் தலைமை ஆசிரியர்கள் முழுபொறுப்பேற்று மதிப்பீடு செய்ய உத்தரவிட்டது.
        மேலும் பிளஸ் 1 தேர்ச்சி முடிவுகளை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் அனுமதி பெற்ற பின்பே வெளியிட வேண்டும்.


           இதில் மதிப்பீடு செய்யப்பட்ட விடைத்தாள்களில் 5 சதவீதம் தலைமை ஆசிரியரே மறுமதிப்பீடு செய்யலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டது. 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையிலான தேர்ச்சி முடிவுகளை சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலரின் ஒப்புதல் பெற்று மே 5ம் தேதிக்குள் வெளியிட உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் பிளஸ் 1 தேர்வு முடிவு வெளியிட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையிலான கூட்டம் வரும் ஏப்ரல் 28ம் தேதி வேலூரில் நடைபெற உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.





1 Comments:

  1. இது அரசு வெளியிட்ட அறிவிப்பு இல்லை என கலவி அதிகாரியே சொல்கிறார்கள்.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive