Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

போலி தொலைபேசி அழைப்புகளால் பாலிசிதாரர்கள் ஏமாற வேண்டாம்: எல்.ஐ.சி. நிறுவனம் எச்சரிக்கை

எல்.ஐ.சி. தொடர்பாக வரும் போலி தொலை பேசி அழைப்புகளால் பாலிசிதாரர்கள் ஏமாற வேண்டாம் என அந்நிறுவனம் எச்சரித்து உள்ளது.
சமீபகாலமாக எல்.ஐ.சி. நிறுவனத்தில் பாலிசி எடுத்திருக்கும் பாலிசிதாரர்களுக்கு தொலை பேசி மூலம் ஒரு அழைப்பு வருகிறது. அதில் பேசும் பெண் ஒருவர் தான் எல்ஐசி நிறுவனத் தில் இருந்து பேசுவதாகக் கூறி சம்மந்தப்பட்ட பாலிசிதாரர்களிடம் அவருடைய பாலிசி எண் ணைத் தெரிவித்து, நீங்கள் எல்.ஐ.சி. நிறுவனம் பெயரில் 12 ஆயிரத்து 546 ரூபாய்க்கு காசோலை அனுப்பினால், உங்களுக்கு போனஸ் தொகையாக ரூ.60 ஆயிரம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
உண்மையில், அப்பெண் பேசியது ‘லைட் இன்பர்மேஷன் கன்சல்டன்ட்’ என்ற நிறுவனத்தில் இருந்து. பாலிசிதாரர்களிடம் இருந்து காசோலைகளை பெறும் போது தனது நிறுவனத் தின் முழுப் பெயரை தெரிவிக்காமல் சுருக்கமாக ‘எல்ஐசி’ எனக் கூறியுள்ளார். இதன் மூலம், அவர் கள் மோசடியில் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.இந்நிலையில், இதுபோன்ற தொலைபேசி அழைப்புகளை நம்பி ஏமாற வேண்டாம் என எல்.ஐ.சி. நிறுவனம் எச்சரித்துள்ளது. இது குறித்து, அந்நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:பாலிசிதாரர்கள் பிரீமியம் உள்ளிட்ட அனைத்து விதமான பரிவர்த்தனைகளுக்கு காசோலை மூலமாக பணம் செலுத்த வேண்டும். அவ்வாறு காசோலை வழங்கும் போது ‘எல்ஐசி ஆப் இந்தியா’ என்று முழு பெயரை குறிப்பிட வேண்டும். காசோலையின் பின்புறம் பாலிசி எண்ணை குறிப்பிட வேண்டும்.
பணமாக செலுத்தும்பட்சத்தில் எல்ஐசி அலுவலகங்களில் மட்டுமே செலுத்த வேண்டும். பணம் செலுத்திய உடன் வழங்கப்படும் ரசீதை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.மேலும், பாலிசிதாரர்கள் தங்களுடைய பாலிசியின் நிலை குறித்து www.licindia.in என்ற இணையதள முகவரி மூலம் அவ்வப்போது சரிபார்த்துக் கொள்ள வேண்டும். எல்ஐசி நிறுவனம் எக்காரணம் கொண்டும் பாலிசிதாரர்களிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பிரீமியம் கட்டுவது, போனஸ் வழங்குவது குறித்து பேசுவது கிடையாது. எனவே, பாலிசிதாரர்கள் எல்ஐசி நிறுவனம் பெயரில் வரும் போலி தொலைபேசி அழைப்புகளைக் கண்டு ஏமாற வேண்டாம்.
அதேபோல், முதிர்வடைந்த பாலிசி களுக்கான தொகை, போனஸ் உள்ளிட்டவை பாலிசிதாரர்களுக்கு அவர்களுடைய வங்கிக் கணக்கில் தேசிய மின்னணு பண பரிவர்த்தனை (NEFT) மூலம் மட்டுமே வழங்கப்படுகிறது.எனவே, பாலிசிதாரர்கள் தங்களுடைய மின்னணு பண பரிவர்த்தனை குறித்த விவரங்களைசம்மந்தப்பட்ட எல்ஐசி நிறுவனத்தின் கிளையில் நேரில் சென்றோ அல்லது தபால் மூலமோ தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு எல்ஐசி நிறுவனம் தெரி வித்துள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive