NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பழைய ரூ.500 நோட்டுகளை பயன்படுத்தி டிச.15 வரை மின்கட்டணம் செலுத்தலாம்

       பழைய ரூ.500 நோட்டுகளைப் பயன்படுத்தி டிசம்பர் 15-ஆம் தேதி வரை மின் கட்டணம் செலுத்தலாம்.
 
          புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை செல்லாது என்று மத்திய அரசு நவ.8-ஆம் தேதி அறிவித்தது. அதனையடுத்து மருந்தகங்கள், பெட்ரோல் நிலையங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய இடங்களில் பழைய நோட்டுகளை நவம்பர் 24-ஆம் தேதி வரை பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக மின்கட்டணம், குடிநீர் வரி உள்ளிட்டவற்றுக்கு பழைய ரூபாய் நோட்டுகள் பெறப்பட்டன.


இந்நிலையில் பழைய ரூ.500 நோட்டுகளை குறிப்பிட்ட சில சேவைகளுக்கு மட்டும் டிசம்பர் 15-ஆம் தேதி வரை பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு வியாழக்கிழமை அறிவித்தது. ஆனால் ரூ.1,000 நோட்டுகளை வங்கிகளில் மட்டுமே மாற்ற வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது.

கால அவகாசம் நீட்டிப்பு: எனவே, மின்சார கட்டணத்தையும் பழைய ரூ.500 நோட்டுகளைப் பயன்படுத்தி டிசம்பர் 15-ஆம் தேதி வரை பொதுமக்கள் செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மின்சார வாரிய அதிகாரிகள் கூறியது:

டிசம்பர் 15-ஆம் தேதி வரை பழைய ரூ.500 நோட்டுகள் மின்கட்டணம் வசூலிக்கும் அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளப்படும். ஆனால் மின் கட்டணத்துக்காக ரூ.1,000 நோட்டுகள் எந்தக் காரணத்தைக் கொண்டும் பெறப்படாது என்று தெரிவித்தனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive