கையடக்க செயற்கைகோளை
தயாரித்த, கரூர் மாணவனுக்கு, போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், 1
லட்ச ரூபாய் பரிசு வழங்கினார். கரூர் மாவட்டம், பள்ளப்பட்டியை சேர்ந்த
முகமது ரிபாத் ஷாருக் ராஜா, 17. இவர், விண்வெளியில் உள்ள வெப்பம், சூழல்,
கதிர்வீச்சு ஆகியவற்றால், செயற்கைகோள் அடையும் மாற்றம் குறித்து கண்டறிய,
கையடக்க அளவிலான செயற்கைக்கோளை கண்டுபிடித்துள்ளார். இந்த செயற்கைகோள்,
அடுத்த மாதம், அமெரிக்காவில் உள்ள, நாசா விண்வெளி ஏவுதளத்தில் இருந்து,
ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படுகிறது. இதையறிந்த, தமிழக போக்குவரத்து துறை
அமைச்சர், விஜயபாஸ்கர், மாணவர் முகமது ரிபாத் ஷாருக் ராஜாவுக்கு, 1 லட்ச
ரூபாய் பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
Public Exam 2026
Revision Test 2026
Home »
» கையடக்க செயற்கைகோளை தயாரித்த கரூர் மாணவனுக்கு 1 லட்ச ரூபாய் பரிசு







Very much useful.
ReplyDelete