Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.


நீட் தேர்வை எழுதிய மாணவ மாணவிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
மேலும் சிபிஎஸ்இ தலைவரும் மருத்துவக் கவுன்சில் தலைவரும் ஜூன் 7-ம் தேதிக்குள் இந்த வழக்கு குறித்து பதிலளிக்கவும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.நீட் தேர்வை எழுதிய மாணவ மாணவிகள் தரப்பில் கடந்த வாரம் முதல் பல்வேறு வழக்குகள் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டு வந்தன.
இதில் மே மாதம் 7-ம் தேதி மருத்துவ பாடங்களுக்கான நீட் தேர்வை பல மொழி மாணவர்கள் எழுதினர். இதில் ஒரே மாதிரியான வினாத்தாளின் அடிப்படையில் கேள்விகள் கேட்கப்படவில்லை, ஆங்கிலத்தில் இருந்த வினாத்தாளுக்கும் தமிழில் இருந்த வினாத்தாளுக்கும் இடையே பெரிய வேறுபாடுகள் இருந்தன. இதனால் இந்தத் தேர்வை செல்லாது என்று அறிவித்து, அதே சமயம் நீட் தேர்வு முடிவுகளை வெளியிடவும் தடை விதிக்கக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி முரளிதரன் மாணவ மாணவிகளின் மனுவை ஏற்று, நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்தார்.
மேலும் இது குறித்து முடிவு செய்ய கால அவகாசம் தேவைப்படுவதால் வழக்கை ஜூன் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.இந்த வழக்கில் தங்கள் தரப்பு விளக்கத்தை அளிக்குமாறு சிபிஎஸ் இயக்குனருக்கும் மருத்துவ கவுன்சில் தலைவருக்கும் நோட்டீஸ் அனுப்பி நீதிபதி முரளிதரன் உத்தரவிட்டார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive