Public Exam Question Bank For Sale

Public Exam Question Bank For Sale

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கிளிமஞ்சாரோ சிகரத்தில் ஏறிய இந்திய சிறுவன்!!!


கிளிமஞ்சாரோ சிகரத்தில் ஏறிய இந்திய சிறுவன்

ஐதராபாத், தெலுங்கானாவை சேர்ந்த, 7 வயது சிறுவன், ஆப்ரிக்காவின் கிளிமஞ்சாரோ மலை சிகரத்தில் ஏறி, சாதனை படைத்துள்ளான். தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது.இங்குள்ள ஐதராபாதை சேர்ந்த சிறுவன், சமன்யூ பெத்துராஜு, 7. மலையேற்றத்தில் ஆர்வம் உடைய, இந்த சிறுவனை, அவனது பெற்றோர், ஊக்குவித்து வந்தனர்.மலைச்சிகரங்களில் ஏற, அவன் பயிற்சி பெற்றான். 


கிழக்கு ஆப்ரிக்க நாடான தான்சானியாவில் உள்ள கிளிமஞ்சாரோ மலை சிகரத்தில் ஏற, முடிவு செய்தான்; இது ஆப்ரிக்காவின் மிக உயர்ந்த மலைச்சிகரம்.கடல் மட்டத்தில் இருந்து, 5,895 மீட்டர் உயரம் உடைய இந்த சிகரத்தில், சமீபத்தில், சிறுவன் ஏறினான். அவனுடன், அவனது தாயார், லாவண்யா, பயிற்சியாளர், உள்ளூர் மருத்துவர் மற்றும் மேலும் இரண்டு பேர் இணைந்தனர்.இந்த மலையேற்றம், மார்ச், 29ல் துவங்கி, ஏப்ரல், 2ல் முடிந்தது. உடல் நிலை காரணமாக, லாவண்யா, பாதியிலேயே விலகினார். சிறுவன் சமன்யூ, சற்றும் மனம் தளராமல், கிளிமஞ்சாரோவின் உச்சியான, உஹூரூ சிகரத்தில் ஏறி, இந்திய கொடியை நாட்டினான்.''அடுத்த மாதம், ஆஸ்திரேலியாவில் உள்ள மலை சிகரத்தில் ஏறி, உலக சாதனை படைப்பதே, சமன்யூவின் லட்சியம்,'' என, அவனது தாயார், லாவண்யா தெரிவித்தார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive