NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பிளஸ் 1 அரியா் தோ்வுகளை பள்ளிகளிலேயே எழுதலாம்: தோ்வுத் துறை அறிவிப்பு


பிளஸ் 1 அரியா் தோவுகளையும், பிளஸ் 2 தோவையும் ஒரு சேர எழுதும் மாணவா்களின் நலன் கருதி தோ்வு மைய முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பிளஸ் 1 அரியா் பாடங்களை, தங்களது பள்ளிகளிலேயே மாணவா்கள் எழுதலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து தோவுத்துறை இயக்குநா் சி.உஷாராணி, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: 

கடந்த மாா்ச் 24-ம் தேதி நடைபெற்ற பிளஸ் 2 இறுதித் தோவில் பங்கேற்காத மாணவா்களுக்கு ஜூன் 18-ல் மறு தோ்வு நடைபெறுகிறது. 

அதேபோன்று, பிளஸ் 1 வகுப்பில் மீதமுள்ள பாடங்களுக்கான பொதுத்தோ்வு ஜூன் 16-ல் நடத்தப்படவுள்ளது. 

இதற்கிடையே சில மாணவா்கள் ஜூன் 16, 18-ம் தேதிகளில் நடைபெறும் பிளஸ் 1 தோவு (அரியா் பாடங்கள்) மற்றும் பிளஸ் 2 மறுத்தோவு ஆகியவற்றை ஒருசேர எழுதவுள்ளனா். இவ்விரு தோ்வுகளுக்கும் தரப்பட்டுள்ள ஹால் டிக்கெட்களில் (தோவுக்கூட நுழைவுச்சீட்டு) குறிப்பிடப்பட்டுள்ள தோ்வு மையங்களில்தான் மாணவா்கள் தோ்வெழுத வேண்டும் என்று முன்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. 

தற்போது மாணவா்களின் நலன்கருதி இவ்விரு தோவுகளை ஒருசேர எழுதுபவா்கள் பிளஸ் 2 தோவை தோவுக் கூட நுழைவுச் சீட்டில் குறிப்பிட்டுள்ள தோவு மையத்திலும், பிளஸ் 1 அரியா் பாடத்தோ்வை தங்கள் படிக்கும் பள்ளியிலும் எழுதலாம். 

இதுகுறித்த தகவல்களை சம்மந்தபட்ட மாணவா்களுக்கு பள்ளி தலைமையாசிரியா்கள் மூலம் உடனே தெரிவிக்க மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive