NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

உங்களுக்கு அல்சர் இருக்கிறதா


உங்களுக்கு அல்சர் இருக்கிறதா

இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் செய்யவும். மேலும் இதுபோன்ற கட்டுரைகளுக்கு மேலே உள்ள பின்பற்றுவோம் பட்டனை அழுத்தவும்.ஒரு லைக் செய்தால் தான் நான் போடும் கட்டுரைகள் உங்களை வந்து சேரும்.

தற்போது உலகில் பெரும்பாலானோர் அல்சர் நோயினால் பாதிக்கப்படுகிறார்கள்.சிலருக்கு பசி ஏற்படாது. அல்சர் அதிகமாகிவிட்டால் அவ்வபோது வாந்தி ஏற்படும். மலத்துடன் ரத்தம் வெளியேறும்.ரத்த சோகை ஏற்படும். இரைப்பையின் கட்டமைப்புக்கு பலம் குறைவதால் தான் அல்சர் ஏற்படுகிறது. இரைப்பையின் தசை பலம் குறைய பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. இரைப்பையில் வீரியம் நிறைந்த ஹைட்ரோ குளோரிக் ஆசிட் உருவாவது முக்கிய காரணம். ஆரோக்கியமானவர்களின் இரைப்பை தசைகள் இந்த அமிலத்தை தடுத்துவிடும்
ஆரோக்கியம் இல்லாவிட்டால் அரித்துப் புண்ணாக்கிவிடும்.அல்சர் ஒரே நாளில் திடீரென்று உருவாகுவதில்லை. அளவுக்கதிகமாக மது அருந்துதல், புகைபிடித்தல் மற்றும் முரண்பாடான உணவுப்பழக்கம், நேரத்திற்கு உணவு சாப்பிடாமல் இருத்தல் போன்றவை அல்சருக்கு காரணமாகி விடுகின்றன.

வழக்கமாக சாப்பிடும் நேரத்தில் சாப்பிடாமல் வயிற்றை காய போட்டு விடுவது. திடீரென்று தேவைக்கதிகமாக சாப்பிடுவது போன்ற தருணங்களில் அமிலம் இரைப்பை சுவரை அரித்து விடும். சிலருக்கு கியஸ்டிரின் என்ற ஹார்மோன் அதிகம் சுரக்கும்.அவர்களுக்கு அமிலச் சுரப்பும் அதிகமாக இருக்கும். அதுவும் அல்சருக்கு காரணம். தொடர்ந்து சிலர் வலிநிவாரணி மாத்திரைகளை உட்கொள்பவர்கள். அவர்களுக்கு எதிர் காலத்தில் அல்சர் ஏற்படலாம்.மன அழுத்தம் தொடர்ந்தாலும் அல்சர் பாதிப்பு தோன்றும். மதுவை விட புகைபிடித்தல் அதிகப்படியான அல்சரைஉருவாக்கிவிடுகிறது.புகை பிடிப்பவர்களுக்கு ஏற்படும் அல்சரை குணமாக்குவது சற்று கடினம். புகை பிடிப்பவர்களின் அருகில் இருப்பவர்களுக்கும் அல்சர் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அல்சரால் பாதிக்கப்படுகிற பெரும்பாலானவர்கள் தங்களுக்கு ஜீரண கோளாறு ஏற்பட்டு இருப்பதாக நினைத்துக் கொள்கிறார்கள்.அவர்கள் நாட்டு மருந்து ,இஞ்சி போன்றவற்றை உட்கொண்டு தற்காலிக தீர்வினை தேடிக் கொள்கிறார்கள்பரிசோதனை மூலம் தொடக்கத்திலே அல்சரை கண்டுபிடித்துவிட்டால் மருந்து மற்றும் உணவுக் கட்டுப்பாடு மூலம்குணப்படுத்திவிடலாம். மேலும் எதிர்காலத்தில் அது புற்றுநோயாக உருவாக கூடிய சூழ்நிலையும் தவிர்த்து விடலாம்.இரைப்பையில் சுரக்கும் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தை எடுத்துப் பரிசோதித்தால் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தின் அளவை கண்டறிந்து விட முடியும்.வாய்வழியாக இரைப்பையின் பகுதிக்கு வீடியோ என்டோஸ்கோபி கருவியை செலுத்தி அல்சரை பரிசோதிக்கலாம். புற்று நோயாக இருக்குமோ என்ற சந்தேககம் இருந்தால் அல்சரில் இருந்து திசுக்களை சுரண்டி எடுத்து பயாப்சி பரிசோதனை மூலம் கண்டறியலாம். இதற்கு நவீன சிகிச்சை மூலம் நிவாரணம் பெறலாம்.

எதிர்காலத்தில் அல்சர் தாக்காமல் இருக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். வறுத்த பொரித்த உணவுகளை தவிர்க்கவேண்டும். நேரத்திற்கு நேரம் போதுமான அளவில் சாப்பிட வேண்டும்.அதிக மசாலா நிறைந்த உணவுகளை தவிர்க்கவேண்டும். உணவு சாப்பிட்டு விட்டு இரண்டு மணி நேரம் கழித்துதான் நீர் பருக வேண்டும்.இதமான சூட்டில் நீர் பருகவேண்டும். மனதை எப்போதும் அமைதியாக வைத்திருக்க வேண்டும். வலிநிவாரணி மாத்திரைகளை டாக்டரின் ஆலோசனையுடன் பயன்படுத்த வேண்டும்.

இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் செய்யவும். மேலும் இதுபோன்ற கட்டுரைகளுக்கு மேலே உள்ள பின்பற்றவும் பட்டனை அழுத்தவும். ஒரு லைக் செய்தால்தான் நாம் போடும் கட்டுரைகள் உங்களை வந்து சேரும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive