NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தட்டச்சு பள்ளிகளை திறக்க கோரி வழக்கு

ஊரடங்கில் தளர்வு அளித்து, தட்டச்சுப் பள்ளிகளை திறக்க கோரிய வழக்கில், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.தமிழ்நாடு தட்டெழுத்து, சுருக்கெழுத்து, கணினி பள்ளிகள் சங்க தலைவர், சங்கர் தாக்கல் செய்த மனு:

கொரோனா ஊரடங்கால், மார்ச், 25ல் இருந்து தட்டச்சு, கணினி பள்ளிகள் செயல்படவில்லை. நீதித்துறை, சட்டசபை, தலைமைச் செயலகம் உட்பட பல அரசுத் துறைகளில், தட்டச்சர், சுருக்கெழுத்தர் பணி இன்றியமையாதது.தொழில்நுட்பக் கல்வி இயக்ககம், செப்டம்பரில் தட்டெழுத்து, சுருக்கெழுத்து தேர்வுகளை நடத்துகிறது. இதில், 1.25 லட்சம் மாணவர்கள் பங்கேற்கின்றனர்.

ஊரடங்கால், வருவாயின்றி, கட்டட வாடகை, சம்பளம், மின் கட்டணம், கடனுக்கான வட்டி செலுத்த முடியவில்லை. எங்கள் வாழ்வாதாரம் பாதித்துள்ளது. பல தொழில் பிரிவினருக்கு, ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.எங்களுக்கு, ஊரடங்கு காலம் துவங்கியது முதல் தளர்வு அளிக்கப்படும் வரை, நிவாரணமாக,மாதம், தலா, 30 ஆயிரம் ரூபாயை, அரசு வழங்க வேண்டும். ஊரடங்கில் தளர்வு அளித்து, நிபந்தனைகளுடன் தட்டச்சுப் பள்ளிகள் செயல்பட அனுமதிக்கக் கோரி, தமிழக அரசுக்கு மனுஅனுப்பினோம். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கோரியிருந்தார்.

நீதிபதிகள், பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி அமர்வு, தமிழக தலைமைச் செயலர், உயர்கல்வித் துறை செயலர், தொழில்நுட்பக் கல்வி இயக்குனரக கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive