மதிப்பிற்குரிய பள்ளிக்கல்வி இயக்குனர் அய்யா அவர்களுக்கு பணிவான வணக்கத்தினை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன், மேலும் கொரானா இரண்டாவது அலை வேகமாக பரவி தினமும் கொரானா வால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 7000 ஐ தாண்டி வருவது தாங்கள் அறிந்ததே. மேலும் ஆசிரியர்கள் தினமும் பயந்து கொண்டு தான் பேருந்தில் பயணம் செய்து பள்ளிக்கு சென்று வருகிறார்கள். பள்ளியில் மாணவர்களே இல்லாத சூழ்நிலையில் ஆசிரியர்கள் மிகுந்த மன உலைச்சலில் பள்ளிக்கு சென்று வருகிறார்கள். எனவே ஆசிரியர்களின் குடும்பங்கள் கொரானா வால் பாதிக்காத வகையில் இந்த ஆண்டிற்கான கடைசி வேலை நாளாக 20. 4.2021 என அறிவித்து உடனடியாக ஆணை வழங்கி உதவிடுமாறும், மேலும் பன்னிரண்டாம் வகுப்புத் பொதுத் தேர்வினை மத்திய அரசு தள்ளி வைத்தது போல தமிழக அரசும் மாணவர்களின் நலன் கருதி பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வினை தேதி குறிப்பிடாமல் உடனடியாக தள்ளி வைக்குமாறு எமது பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகத்தின் சார்பில் தங்களை பணிந்து கேட்டுக்கொள்கிறேன். நன்றி அய்யா. இவண், நல்லாசிரியர், ஆ.வ. அண்ணாமலை, மாநில சிறப்புத் தலைவர், பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகம், விழுப்புரம். கைபேசி எண் 94436 19586
Election 2024
Public Exam Questions 2024
NEET Coaching Centre
Latest Updates
Home »
Padasalai Today News
» பள்ளிகளின் கடைசி வேலை நாளாக 20.4.2021 அறிவிக்குமாறு ஆசிரியர் சங்கம் கோரிக்கை!
கடந்த ஒரு வருடமாக வீட்டில் உட்கார்ந்து ஐந்து லட்சம் முதல் 12 லட்சம் வரை மக்களின் வரி பணத்தை சம்பளம் வாங்கிக் கொண்டு ஒரு துளி அளவு கூட மாணவர்களின் மீது அக்கறை இல்லாமல் விடுமுறை கேட்கிறீர்களே அரசு ஆசிரியர் சங்கங்களை உங்கள் மனதில் என்ன நினைப்பு பாவம் மாணவர்களை கரை சேர்க்க வேண்டும் என்கின்ற எண்ணம் இல்லாமல் சுயநலமாக இருக்கும் அரசு ஆசிரியர் சங்கங்களும் விடுமுறை கேட்கும் ஆசிரியர்களும் அவர்களது குடும்பமும் நாசமாகப் போகட்டும் இவன் பொதுமக்கள்
ReplyDeleteama correct student mela pasaum irrutha eppadi pesuviga nasama poga unnga family nasama poga neega ellaum nalla irrukamateriga
Deletesathiya naaga sollurum