NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பொது தேர்வுக்கான ஏற்பாடுகள் அதிகாரிகள் இன்று ஆலோசனை

 

 பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்து, பள்ளிக்கல்வி மற்றும் தேர்வு துறை அதிகாரிகள், இன்று ஆலோசனை நடத்த உள்ளனர்.

தமிழகத்தில், கொரோனா தடுப்புக்கான ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப் பட்டுள்ளன. ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பள்ளிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் நடக்கின்றன. நர்சரி பள்ளிகளையும், ௧6ம் தேதி முதல் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது.இந்நிலையில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு, ஏப்ரலில் பொதுத்தேர்வு நடத்துவதற்கு, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக, பள்ளி கல்வி அதிகாரிகளும், அரசு தேர்வு துறை அதிகாரிகளும் இன்று ஆலோசனை நடத்த உள்ளனர்.இதில், பொதுத்தேர்வை எத்தனை நாட்கள் நடத்துவது; ஒவ்வொரு பாடத்துக்கும் இடைவெளி விடுவதா; தொடர்ச்சியாக நடத்தி முடிப்பதா என்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. பிளஸ் 1 பொதுத்தேர்வு உட்பட மற்ற வகுப்புகளுக்கு எப்போது தேர்வு நடத்துவது என்றும் ஆலோசிக்கப்பட உள்ளது.பின், சுகாதார துறையினருடன் ஆலோசிக்கப்பட்டு, தேர்வு அட்டவணை இறுதி செய்யப்படும் என, பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive