ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலைப் படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெற வேண்டும். முதன்மைத் தேர்வு, பிரதானத் தேர்வு என இது இரு பிரிவாக நடத்தப்படும். இதில் முதன்மைத் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் 2 கட்டமாக நடத்துகிறது.
அதன்படி, 2026-27-ம் கல்வி ஆண்டுக்கான ஜேஇஇ முதல்கட்ட முதன்மைத் தேர்வு ஜன.21 முதல் 30-ம் தேதி வரை நடத்தப்பட்டது. சுமார் 12 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இதன் முடிவுகள் பிப்.12-ம் தேதி வெளியிடப்பட உள்ளன. இதை தொடர்ந்து, ஜேஇஇ 2-ம் கட்ட தேர்வு ஏப்.1 முதல் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்ப பதிவு தற்போது தொடங்கியுள்ளது.விருப்பம் உள்ள மாணவர்கள் jeemain.nta.nic.in என்ற இணையதளம் மூலமாக பிப்.25-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
முதல்கட்ட தேர்வை எழுதியவர்களும் பங்கேற்கலாம். தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் தேர்வு நடைபெறும். ஹால் டிக்கெட் வெளியீடு உள்ளிட்ட இதர விவரங்கள் பின்னர் வெளியிடப்படும் கூடுதல் தகவல்களை nta.ac.in என்ற தளத்தில் அறியலாம். விண்ணப்பிப்பதில் சிரமம் இருந்தால், 011-40759000/ 69227700 என்ற தொலைபேசி எண் அல்லது jeemain@nta.ac.in எனும் மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று என்டிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...