பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கான எழுத்துத் தேர்வுகள் எதுவுமின்றி தேர்வு செய்யப்படும் மத்திய அரசு வேலைக்கான சிறந்த வாய்ப்பை தகுதியானவர்கள் பயன்படுத்தி பலன் பெறலாம்.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
மொத்த காலிப் பணியிடங்கள் : 28,740
பணி: BRANCH POSTMASTER (BPM)
சம்பளம்: மாதம் ரூ. 12,000 - ரூ.29,380
பணி: ASSISTANT BRANCH POSTMASTER (ABPM)
பணி: DAK SEVAK
சம்பளம்: மாதம் ரூ. 10,000 - ரூ.24,470
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியிடன் விண்ணப்பிக்கும் மாநிலத்தின் உள்ளூர் மொழி எழுத, பேச தெரிந்திருக்க வேண்டும். கூடுதல் தகுதியாக, கணினியில் பணிபுரியும் திறன் மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி,எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வோ, நேர்முகத் தேர்வோ கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை: https://indiapost.gov.in அல்லது https://indiapostgdsonline.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 14.2.2026







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...