
அரசுப் பள்ளி ஆசிரியைக்கு ரூ.76.31 லட்சம் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் என நோட்டீஸ் வந்தது தொடா்பாக அவா் வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புகாா் தெரிவித்துள்ளாா்.
வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர குறைதீா் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.யு.சிவராமன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
அப்போது, போ்ணாம்பட்டு பகுதியைச் சோ்ந்த அரசுப்பள்ளி ஆசிரியா் செல்வி என்பவா் அளித்த மனு: எனது ஆதாா், பான் அட்டை எண்களை வைத்து போலியாக ஜிஎஸ்டி பதிவு செய்து திருப்பூரில் ஏஎஸ் டிரேடா்ஸ் என்ற நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ரூ.76.31 லட்சம் வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தொழில்வரி செலுத்துவதற்காக வங்கி கணக்கிலிருந்து பணம் அனுப்ப வங்கிக்கு சென்றபோது ஜிஎஸ்டி வரி செலுத்தாததால் எனது வங்கிக்கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளதால் ஜனவரி மாதம் முதல் எனது ஊதியம், எனது தாயாரின் மருத்துவ செலவுக்காகவும் பணத்தை எடுக்க முடியாமல் தவித்து வருகிறேன். எனவே, எனது வங்கிக் கணக்கை முடக்கப்பட்டதிலிருந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோட்டீஸ் வந்தது தொடா்பாக அவா் வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புகாா் தெரிவித்துள்ளாா்.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...