ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு ஆண்டுக்கு 2 முறை மனநல நிபுணர்களைக் கொண்டு கட்டாயம் பயிற்சி அளிக்க வேண்டும் என்று பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து அனைத்துப்பள்ளிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பின் அடிப்படையில் அனைத்து பள்ளிகளுக்கும் மனநலம் மற்றும் நல்வாழ்வு மற்றும் சமூக உணர்ச்சி கற்றல் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு ஆண்டுக்கு 2 முறை மனநல நிபுணர்களை கொண்டு கட்டாயப் பயிற்சிஅளிக்க வேண்டும்.
இதில் மாணவர்களின் மனஅழுத்த அறிகுறிகளை கண்டறிதல், முதலுதவி மனநல சிகிச்சை, சுயபரிசோதனை மற்றும் சரியான மருத்துவ ஆலோசனைக்கு வழிநடத்துதல், மாணவர்களிடம் எவ்வித பாகுபாடின்றி கனிவாக நடந்து கொள்ளுதல் குறித்த பயிற்சி அதில் இடம்பெற வேண்டும்.
இதுதவிர ஆலோசனை குறித்த ஆண்டறிக்கையை பள்ளி நிர்வாகம் தயார் செய்ய வேண்டும். இதன் ரகசியம் பாதுகாக்கப்பட வேண்டும். தனித்தன்மையை வெளிப்படுத்தும் வகையில் தேர்வு முறைகள் அவ்வப்போது மதிப்பாய்வு செய்யவேண்டும்.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...