![]() |
| வலந்தீனா தெரெசுக்கோவா |
Charity is a double blessing.
தருமம் தலை காக்கும்.
இரண்டொழுக்க பண்புகள் :.
1. எனது உணவானது விவசாயி போன்ற பலர் உழைப்பில் வருகிறது.
2. எனவே உணவை வீணாக்க மாட்டேன்.
பொன்மொழி :
வெற்றி என்பது புத்திசாலிகளின் சொத்தல்ல. அது முன்னேற துடிக்கும் உழைப்பாளிகளுக்கும் தன்னம்பிக்கைக்குமே சொந்தம்.- அடால்ப் ஹிட்லர்
பொது அறிவு :
01.மருத்துவத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
ஹிப்போகிரேட்டஸ் (Hippocrates)
02. உலகின் கரும்பு உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது?
பிரேசில்-Brazil
English words :
Skirmish-: A small or short fight between small groups of soldiers, usually before a bigger battle.
Combat
: Fighting in a war or battle between armed forces.
அறிவியல் களஞ்சியம் :
காந்த துருவம் (Magnetic Pole): காந்தத்தின் வட அல்லது தென் முனைகள், காந்த வலிமை அதிகமுள்ள இடங்கள்.
காந்த புலம் (Magnetic Field): காந்தப் பொருள்கள் ஈர்க்கப்படும் அல்லது விலக்கப்படும் காந்தத்தைச் சுற்றியுள்ள பகுதி.
மார்ச் 06
வலந்தீனா விளாடிமீரொவ்னா தெரெசுக்கோவா அவர்களின் பிறந்தநாள்
நீதிக்கதை
வெங்காயம்
ஒரு வீட்டில தக்காளி வெங்காயம் மற்றும் குச்சி ஐஸ் மூன்றும் நல்ல நண்பர்களா வாழ்ந்து வந்தது.
ஒரு நாள் தக்காளிக்கு வெளிஉலகை சுற்றிபார்க்க ஆசை வந்தது.தக்காளி இப்படிச் சொன்னதும் வெங்காயம் சொல்லுச்சு அய்யோ நாம இங்கிருந்து வெளியே போவது நமக்கு பாதுகாப்பு இல்லை..அதனால நம்ம வீட்டிலேயே இருந்திடலாம்.
வெங்காயம் சொன்னதை தக்காளி கேட்கவே இல்லை.தக்காளி குச்சி ஐஸ் கூட்டி கிட்டு வெளியே கிளம்பிச்சு. வெங்காயம் அவங்கள தனியா போக வேண்டாம்னு சொல்லிட்டு வெங்காயமும் கூடவே போச்சு.
அது டிசம்பர் மாசம் கொஞ்சம் குளிராக இருந்தது.எல்லாரும் ஜாலியா வெளிய போய் விளையாடினாங்க.
இரண்டுமாதங்கள் கழித்து வெயில் காலம் வந்தது.
தக்காளி வெங்காயம் குச்சி ஐஸ் மூன்றுபேரும் எப்பவும் போல விளையாட வெளியே போனாங்க அப்போ வெயில் அதிகமா இருந்தது.வெயிலின் காரணமாக குச்சி ஐஸ் உருகிடுச்சு.
இதைப் பார்த்த தக்காளியும் வெங்காயமும் ரொம்பவே வருத்தப்பட்டார்கள்.
நாம திருப்பி வீட்டுக்கு போயிடலாம் அப்படின்னு சொல்லி போய்க்கிட்டு இருக்கும் போது ஒரு சின்ன பையன் பந்தை வைத்து விளையாடிக் கொண்டு இருந்தான்.
அந்தப் பையன் பந்தை தூக்கி போட்டான் .அந்தப் பந்து தக்காளியை நோக்கி வந்தது. இதைப் பார்த்த வெங்காயம் பந்தை தடுத்து நிறுத்தி தட்டி விட்டது.
பின்பு வீட்டை விட்டு வெளியே வந்தாலே நிறைய ஆபத்துகள் உள்ளன என்று எண்ணி இரண்டும் வீட்டிற்கு விரைந்து சென்று கொண்டு இருந்தது. சாலையை கடக்க தக்காளியும் வெங்காயமும் சென்று கொண்டிருக்கும் பொழுது ஒரு லாரி அங்கு வேகமாக வந்து கொண்டு இருந்தது.
இதை கவனிக்காத தக்காளி சாலையை கடக்கும் பொழுது லாரி தக்காளியின் மேல் ஏறியது..லாரி தக்காளியின் மேல் ஏறியதும் தக்காளி நசுங்கி செத்துப்போச்சு.
தன் நண்பனை காப்பாற்ற முடியலியே அப்படின்னு மிகவும் வருத்தத்தில் வெங்காயம் வீட்டிற்கு வந்தது..வீட்டிற்கு வந்த வெங்காயம் வருத்தத்தில் மிகவும் அழுதது.
அப்போ வெங்காயம் கடவுள் கிட்ட கேட்டு ஓ கடவுளே! என்னோட பிரெண்ட்ஸ்காக நான் அழுதேன்.நான் இல்லாம போனா எனக்காக வருத்தப்பட்டு அழுவதற்கு யாரு இருக்கா?.
அப்போ கடவுள் வெங்காயத்தின் முன்பு தோன்றி வெங்காயமே நீ வருத்தப்படாத.வெங்காயமே உனக்கு ஏதாவது ஆகிடுச்சுனா உன்னை சுற்றி இருப்பவர்கள் அனைவரும் அழுவார்கள்.அதற்கான ஒரு வரத்தை நான் உனக்கு அளிக்கிறேன் என்று கடவுள் கூறினார்.
அதுக்குவெங்காயம்நான் இப்போ தனியாதானே இருக்கிறேன்.அதனால என்னோட ஃப்ரண்ட்ஸ் எல்லாரையும் எனக்கு திருப்பி கொடுங்க.அப்படின்னு சொல்லுச்சு.
உடனே கடவுள் நான் உனக்கு ஒரு புது நண்பனை கொடுக்கிறேன்.அவன் பெயர் மிளகாய்.மக்கள் உங்கள் இரண்டு பேரையும் எப்பொழுதும் சேர்த்துதான் சமையலுக்கு எடுப்பார்கள் என்றுகூறினார்.
தன்னோட புது நண்பனோட வெங்காயம் சந்தோஷமா இருந்துச்சு.
இன்றைய செய்திகள்








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...