Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

10-ம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை தொடக்கம்

hindutamil-prod%2F2026-03-09%2Fxdnpm4qa%2F15512133 
தமிழக பள்​ளிக்​கல்வி பாடத் திட்​டத்​தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த 2-ம் தேதி தொடங்கி நடந்து வரும் நிலை​யில், 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை (மார்ச் 11) தொடங்கி ஏப்​.6 வரை நடை​பெற உள்​ளது. முதல் நாளில் தமிழ் உள்​ளிட்ட மொழிப் பாடத் தேர்​வு​கள் நடை​பெறுகின்​றன.
 
மாநிலம் முழு​வதும் உள்ள 4,219 மையங்​களில் தேர்வு நடைபெறுகிறது. 12,467 பள்​ளி​களில் இருந்து 8 லட்​சத்து 82,806 மாணவர்​கள், 26,196 தனித்​தேர்​வர்​கள், 395 சிறைக் கைதி​கள் என மொத்​தம் 9 லட்​சத்து 9,397 பேர் தேர்வு எழுதுகின்​றனர். மாற்​றுத் திற​னாளி​கள், சிந்​தனைத் திறன் குறை​பாடு உடைய​வர்​கள் என 12,292 மாணவர்​கள் ‘ஸ்​கிரைப்’ உதவி​யுடன் பங்​கேற்​கின்​றனர்.
 

அறை கண்​காணிப்பு பணி​யில் 49,542 ஆசிரியர்​கள் ஈடு​படு​கின்​றனர். முறை​கேடு​களை தடுக்க 4,954 நிலை​யான மற்​றும் பறக்​கும் படைகள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. மாவட்ட ஆட்​சி​யர், முதன்​மைக் கல்வி அலு​வலர், வரு​வாய்த் துறை அதி​காரி​கள் தலை​மை​யிலும் சிறப்பு கண்​காணிப்​புக் குழுக்​கள் ஏற்​படுத்​தப்​பட்​டுள்​ளன.

சுமார் 300 வினாத்​தாள் கட்​டுக்​காப்பு மையங்களில் ஆயுதம் தாங்​கிய போலீ​ஸார் 24 மணி நேர​மும் பாது​காப்பு பணி​யில் ஈடு​படு​வார்​கள். தேர்வு மையங்​களில் குடிநீர், இருக்​கை, மின்​சா​ரம், காற்​றோட்​டம், வெளிச்​சம் மற்​றும் கழிப்​பறை வசதி​கள் சிறப்​பாக செய்​யப்​பட்​டுள்​ளன.

மாணவர்​கள் ஹால்​டிக்​கெட்​டில் உள்ள விதி​களைப் பின்​பற்றி செயல்பட வேண்​டும். விடைத்​தாளில் நீலம், கருப்பு நிற பேனா​வால் மட்​டுமே எழுத வேண்​டும். கலர் பென்​சில், பேனா பயன்​படுத்​தக் கூடாது. பெயர், தேர்வு எண், சிறப்பு குறி​யீடு ஆகிய​வற்றை குறிப்​பிடக் கூடாது.

மாணவரின் புகைப்​படம், பதிவு எண், பாடம் போன்ற விவரங்​கள் கொண்ட முகப்​புத்​தாள், முதன்மை விடைத்​தாளு​டன் இணைத்து வழங்​கப்​படும். அதை சரி​பார்த்து மாணவர்​கள் கையொப்​பமிட வேண்​டும். தேர்வு அறைக்​குள் மாணவர்​கள், அறை கண்​காணிப்​பாளர்​கள் செல்​போன் போன்ற மின்​சாதனங்​களைக் கொண்​டு​வரக் கூடாது என்று பல்​வேறு கட்​டுப்​பாடு​கள் விதிக்​கப்​பட்​டுள்​ளன.

ஆள்​மாறாட்​டம் செய்​வது, தேர்வு அதி​காரி​யிடம் முறை​கே​டாக நடப்​பது, விடைத்​தாளைமாற்​று​வது, காப்பி அடிப்​பது போன்ற ஒழுங்​கீனச் செயல்​களில் ஈடு​பட்​டால் நடவடிக்கை எடுக்​கப்​படும். அதி​கபட்​சம் 3 ஆண்​டு​கள் அல்​லது நிரந்​தர​மாக தேர்வு எழுத தடை விதிக்​கப்​படும். இதற்கு உடந்​தை​யாக இருக்​கும் பள்ளி நிர்​வாகத்​தின் அங்​கீ​காரம் ரத்து செய்​யப்​படும் என்​றும் எச்​சரிக்​கப்​பட்​டுள்​ளது.

பொதுத் தேர்வு குறித்த புகார்​கள், கருத்​துகளை மாணவர்​கள்,பெற்​றோர் தெரிவிக்க வசதி​யாக,கட்​டுப்​பாட்டு அறை அமைக்​கப்​பட்​டுள்​ளது. தேர்வு நாட்​களில் தின​மும் காலை 8 முதல் இரவு 8 மணி வரை 9498383075, 9498383076 ஆகிய எண்​களில் தொடர்பு கொள்​ளலாம். பள்​ளிக்​கல்​வித் துறை​யின் ‘14417’ என்ற இலவச உதவி மையத்​தை​யும் தொடர்பு கொள்​ளலாம். தேர்வு முடிவு​கள் மே 20-ம் தேதி வெளி​யிடப்​படும் என்று தேர்​வுத் துறை தெரிவித்​துள்​ளது.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive