![]() |
| வில்லியம் கோல்கேட் |
Grasp all lose all.
பேராசை பெரு நஷ்டம்.
இரண்டொழுக்க பண்புகள் :.
1.போட்டி நிறைந்த உலகில் போராடத் தேவையான வல்லமையை வளர்த்துக் கொள்வேன்.
2.என் திறமைகளை வளர்த்துக் கொண்டு சாதனைகள் புரிவேன்.
பொன்மொழி :
முடியும் என்று நம்பினால் வாய்ப்புகளை காண்பீர்கள்.
முடியாது என்று நினைத்தால் தடைகளே கண்களுக்கு தெரியும்.
பொது அறிவு :
01.தமிழில் அச்சிடப்பட்ட முதல் நூல் எது?
தம்பிரான் வணக்கம் -
Thambiran Vanakkam
02.உலகின் இரண்டாவது பெரிய நீதிமன்ற வளாகம் எங்குள்ளது?
இந்தியா- சென்னை உயர் நீதிமன்ற வளாகம்
India- Chennai high court complex
English words :
Canvassing – Asking people for votes
Rally – Public meeting to support a candidate
தமிழ் இலக்கணம்:
கற்போம் தமிழ்
நேற்று காற்று வீசும் திசையின் அடிப்படையில் காற்றின் பெயர்கள் பார்த்தோம். இன்று வேக அடிப்படையில் அதன் பெயர்கள் பார்ப்போம்
0 - 6 கிமீ வேகம் மென்காற்று
6 - 11 கிமீ வேகம்
இளந் தென்றல்
11 - 19 தென்றல்
20 - 29 கிமீ வேகம்
புழுதிக் காற்று
30 - 39 கிமீ வேகம்
ஆடிக் காற்று
40 - 100 கிமீ வேகம்
கடும் காற்று
101 கிமீ மேல் புயல் காற்று
அறிவியல் களஞ்சியம் :
கரப்பான் பூச்சி தலை துண்டிக்கப்பட்டாலும் ஒரு வாரம் வரை உயிர்வாழும்.
மார்ச் 25
நீதிக்கதை
இரண்டு நண்பர்கள்
ராமுவும் மாரியும் நண்பர்கள். அவர்கள் இருவருக்கும், தாய், தந்தையர் மற்றும் சுற்றார் கிடையாது. இது போதாதென்று ராமுவுக்குக் கண் தெரியாது. அதேபோல் மாரியால் நடக்க முடியாது. அவர்கள் வாழ்ந்த கிராமத்தில் கிடைத்த வேலையைச் செய்து, கிராமத்தில் உள்ளோர் கொடுப்பதைச் சாப்பிட்டு வாழ்ந்து வந்தனர்.
ஒரு நாள் அவர்களுக்குச் சிறிது தொலைவில் உள்ள மற்றொரு ஊரில் நடக்கும் திருவிழா பற்றித் தெரிய வந்தது. இருவருக்கும் அங்கே போக மிகுந்த ஆசை. அந்த ஊருக்குச் செல்ல மிகுந்த தொலைவு நடக்க வேண்டும். மாரி சலிப்புடன் சொன்னான்” “என்னாலோ நடக்க முடியாது, உன்னாலோ பார்க்க முடியாது. இந்த லட்சணத்தில் நமக்கு ஏன் இந்த ஆசை?”
ராமு சிறிது நேரம் தீவிரமாக யோசித்து விட்டுச் சொன்னான்: “நண்பா! யோசித்துப் பார். உன்னால் நடக்கத்தான் முடியாது. ஆனால் கூர்மையாகப் பார்க்க முடியும். என்னால் பார்க்கத்தான் முடியாது. ஆனால் வெகுதூரம் நடக்க முடியும். நீ என் தோள் மேல் ஏறிக் கொள். எனக்கு வழியைச் சொல்லிக் கொண்டே வா. நாம் இருவரும் திருவிழாவிற்குச் சென்று வர முடியும்”
ராமுவும் மாரியும் திருவிழாவிற்குச் சென்று வந்தார்கள்!!
1. நம் பலங்கள் எவை என்பதை எப்பொழுதும் உணர்ந்திருப்பது அவசியம். அவற்றைத் தகுந்த சமயத்தில் உபயோகிக்கத் தெரிய வேண்டியதும் அவசியம்.
2. ஏன் நம்மால் ஒரு காரியத்தை சாதிக்க முடியாது என்று யோசிப்பதை விட, எப்படி சாதிக்க முடியும் என்று யோசிப்பது அதிகப் பயன் தரும்.
3. அடுத்தவர் பலங்கள் நமக்குப் பயன் தர வேண்டுமானால், அவர்களுக்குத் தேவையான நமது பலங்களின் பயன்களை அவர்களுக்கு அளித்து உதவத் தயங்கக்கூடாது.
4. முயன்றால் முடியாதது எதுவுமில்லை.
இன்றைய செய்திகள்








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...