பெற்றோரும் மாணவர்களுக்கு அழுத்தத்தை கொடுக்க வேண்டாம். விருதுநகர் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு சென்ற மாணவி விபத்தில் சிக்கிஉயிரிழந்த செய்தி வருத்தமளிக்கிறது. இயன்றவரை, அருகில் உள்ள தேர்வு மையங்கள்தான் மாணவர்களுக்கு ஒதுக்கப்படுகின்றன. எனினும், எதிர்பாராதவிதமாக இதுபோன்ற அசம்பாவிதங்கள் நிகழ்கின்றன.இதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.
இதற்கிடையே, பிளஸ் 2 தமிழ் தேர்வு எளிதாக இருந்ததாக மாணவர்கள் தரப்பில் கூறப்பட்டது. இதுகுறித்து தமிழ் ஆசிரியர்களிடம் கேட்டபோது, ‘‘ஒரு மதிப்பெண் பகுதியில் மொத்தம் உள்ள 14 கேள்விகளில் 3 மட்டும் சற்று கடினமாக இருந்தன. மற்ற கேள்விகள் எளிதாகவே இருந்தன.
சிறுவினா, மனப்பாடம், இலக்கணம், நெடுவினா ஆகிய பகுதிகளில் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் ஏற்கெனவே கேட்கப்பட்ட கேள்விகளே மீண்டும் இருந்தன. இதனால், சராசரியாக படிக்கும் மாணவர்கள்கூட தமிழ்ப் பாடத்தில் அதிக மதிப்பெண் பெற வாய்ப்பு உள்ளது’’ என்றனர்.
இன்று முதல் ‘பிளஸ் 1’ அரியர் தேர்வு: மாணவர்களுக்கான அழுத்தத்தை குறைக்கும் நோக்கில், நடப்பு ஆண்டு முதல் பிளஸ் 1 பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. எனினும், முந்தைய ஆண்டுகளில் பிளஸ் 1 பொதுத் தேர்வில் வெற்றி வாய்ப்பை இழந்த மாணவர்கள், அந்த பாடங்களை அரியர் தேர்வாக எழுத வேண்டும் என்று தேர்வுத் துறை அறிவித்தது. அதன்படி, பிளஸ் 1 அரியர் பொதுத் தேர்வு இன்று (மார்ச் 3) தொடங்குகிறது.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...