செஞ்சி அருகே, 10ம் வகுப்பு ஆங்கிலம் முதல்தாள் விடைத்தாள்கள் மாயமான
விவகாரத்தில், அஞ்சலக புறநிலை ஊழியர், சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்.
மாயமான விடைத் தாள்களுக்கு மறுதேர்வு கிடையாது.
Text Books / Guides / Study Materials Download
பிளஸ் 2 இயற்பியல் தேர்வு முறைகேடு: தனியார் பள்ளி நிர்வாகம் மீது வழக்கு
பிளஸ் 2, இயற்பியல் பொதுத் தேர்வின் போது, முறைகேட்டில் ஈடுபட்ட,
நாமக்கல் தனியார் பள்ளி நிர்வாகத்தினர் மீது, மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு
போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அரியலூர் பள்ளி குழந்தைகளுக்கு லட்டு, அல்வா: தமிழக அரசு அறிவிப்பு
"ஊட்டச்சத்து பற்றாக்குறை அதிகமாக உள்ள அரியலூரில், பள்ளி
குழந்தைகளுக்கு, லட்டு, அல்வா, கார வகைகள் வழங்கப்படும்&' என, தமிழக
அரசு அறிவித்துள்ளது.
"டான்செட்" நுழைவு தேர்வு: தகவல் அறிய மையங்கள் அமைப்பு
முதுகலை தொழில்நுட்ப படிப்புகளுக்கு, தமிழக அரசின் பொது நுழைவுத் தேர்வு
(டான்செட்), வரும் 6, 7ம் தேதிகளில் நடக்கிறது. தேர்வு பற்றி தகவல்களை, 15
மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள மையங்களில் மாணவர்கள் பெறலாம் என,
டான்செட் செயலர் கூறியுள்ளார்.
கல்லூரி கோடை விடுமுறை நாட்கள் குறைய வாய்ப்பு
கல்லூரிகளில், குறைந்த அளவு வேலை நாட்கள் உள்ளதால், சிறப்பு வகுப்புகள்
மூலம், வேலை நாட்களை ஈடு செய்ய, ஆசிரியர்கள் திட்டமிட்டுள்ளனர். இதனால்,
கோடை விடுமுறை காலம் குறையும் என, கூறப்படுகிறது.
பல்கலைக்கழக கல்லூரி மாணவர்களுக்கும் லேப்டாப்: ஐகோர்ட் உத்தரவு
பல்கலை கல்லூரி மாணவர்களுக்கும் இலவச "லேப்டாப்" வழங்க, தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும் என, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
மாயமான விடைத்தாள்களை தேடும் அதிகாரிகள்
நேற்று விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே 10-ம் வகுப்பு
ஆங்கில தேர்வு விடைத்தாள் அடங்கிய பார்சல் மாயமானது. இதற்கு
அஞ்சல்துறையினரின் அலட்சியப்போக்கு காரணம் என கூறப்படுகிறது.
அகவிலைப்படி உயர்வு சார்பான முடிவு, நிதி அமைச்சரின் வெளிநாட்டு பயணத்தால் நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எட்டப்படவில்லை.
மத்திய அரசு
ஊழியர்களுக்கான ஜனவரி 2013 முதல் 8% அகவிலைப்படி உயர்வு, ஏப்ரல் 2ந்
தேதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் கிடைக்கும் என்றும்,
இதற்கான முடிவு அறிவிக்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள்
தெரிவித்தன. ஆனால் பிரதமர் தலைமையில் நடைபெற்ற நேற்றைய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் நிதி அமைச்சர் 3 நாள் அரசு முறை பயணமாக ஜப்பான் நாட்டிற்கு சென்றுள்ளதால்,
அகவிலைப்படி உயர்வு பற்றிய முடிவு அடுத்த நடைபெற உள்ள அமைச்சரவை
கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும் என்று செய்தி மற்றும்
ஒளிப்பரப்பு துறை அமைச்சர் மனீஷ் திவாரி தெரிவித்தார்.
தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் 04.04.2013 அன்று மாவட்ட தலைநகரங்களில் நடைபெற உள்ள ஆர்பாட்டத்தில் எந்தவித அசாம்பவித சம்பவம் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவு.
ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் ஊதிய
பிரச்சனைகள் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப்
பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் 04.04.2013 அன்று மாவட்ட தலைநகரங்களில்
நடைபெறவுள்ள ஆர்பாட்டத்தில் எந்தவித அசாம்பவித சம்பவம் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள
அனைத்து முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், மாவட்ட
தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு
தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
நோய் அல்ல குறைபாடு: இன்று உலக ஆட்டிசம் தினம்
ஆட்டிசம் என்பது, குழந்தையின் மூளையிலுள்ள
நரம்பு மண்டலத்தில் ஏற்படும் வளர்ச்சிக் குறைபாடு. இது பற்றி பெரும்பாலான
பெற்றோர்கள் கண்டு கொண்டாலும், சரியான நேரத்தில் டாக்டரை அணுகுவதில்லை.
இக்குறைபாடு உள்ளவர்கள் என்ன செய்ய வேண்டும்
என்பதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, ஏப்., 2ம் தேதி உலக
ஆட்டிச விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
அரசு ஊழியர்கள் பணிப்பதிவேடுகளை மின்னணு குறிப்புகளாக மாற்ற உத்தரவு
சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை கொள்கை விளக்க குறிப்பில் இடம்
பெற்றுள்ள விவரம் வருமாறு: பணியாளர்கள் பெற்ற சலுகைகள் மற்றும் பயன்களை
கண்காணிக்கும் வகையில் அனைத்து பணியாளர்களின் பணிப்பதிவேடுகளில்
உள்ள பதிவுகள் கம்ப்யூட்டரில் பயன்படுத்தும்
வகையில் மின்னணு குறிப்புகளாக மாற்றி பதிவு செய்ய முடிவு
செய்யப்பட்டுள்ளது.
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.
CPS தொடர்பாக "CITU" தொடர்ந்த வழக்கில் சென்னை
உயர்நீதிமன்றம் அதிரடி இடைக்கால உத்தரவிட்டுள்ளது. அவ்வுத்தரவில்
இறந்தவருக்கு எந்த மாதிரியான செட்டில்மென்ட் என்பதை இரண்டு வாரத்திக்குள்
பதிலளிக்க வேண்டும் எனவும், அதுவரை புதிய பங்களிப்பு ஓய்வூதியத்
திட்டத்தில் மனுதாரர் கட்டிய சந்தாவை பங்கு சந்தையில் மூதலீடு செய்ய கூடாது
எனவும், இறந்தவரின் பங்களிப்பு தொகையினை வட்டி தரக்கூடிய வைப்பு நிதியாக
வைக்க உயர்நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான ஜனவரி 2013 முதல் 8% அகவிலைப்படி உயர்வு, இன்று ஒப்புதல் கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான ஜனவரி 2013 முதல்
8% அகவிலைப்படி உயர்வு, இன்று ஏப்ரல் 2ந் தேதி நடைபெற உள்ள அமைச்சரவை
கூட்டத்தில் ஒப்புதல் கிடைக்கும் என்றும், இதற்கான முடிவு எடுக்கப்படும்
என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த அறிவிப்பால் சுமார் 50
லட்சம் அரசு ஊழியர்கள், 30 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு தற்போதுள்ள
விலைவாசி உயர்வை சமாளிக்க உதவியாக இருக்கும்.
கருகும் தாவரம் - தாவரவியல் பட்டதாரிகளின் கண்ணீர் கதை.
"கருகும் தாவரம்"
- தாவரவியல் பட்டதாரிகளின்
கண்ணீர் கதை.
முதுகலை தாவரவியல்
பட்டதாரிகளின் பணிநியமனம் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் தாவரவியல் பட்டதாரிகள் கண்ணீர்
சிந்தி வருகின்றனர்.
இவர்களின் கண்ணீர்
கதை பற்றி சற்று விரிவாக பார்ப்போம்.
கல்லூாரியில் சேரும்
போதே பி.ஏ போன்ற மற்ற பட்டங்களை விட பி.எஸ்.சி போன்ற பட்டங்களில் சேர கடும் போட்டி
அதிகம். மேலும் படிப்பு கட்டணமும் அதிகம். மூன்று வருடங்கள் முடிக்கும் போது அரியர்
இல்லாமல் தேர்ச்சி பெற்று வருவதே மிகவும் கடினம். அதிலும் 80 சதவீதத்திற்கு மேல் இருந்தால்
தான் அரசு பி.எட். கல்லூரிகளில் சேர வாய்ப்பு கிடைக்கும். இல்லையேல் தனியார் பி.எட்
கல்லூரிகளில் சேர கட்டணமும் அதிகம், நன்கொடை வேறு.
DEPT EXAM COLLECTIONS - REMINDER
DEPARTMENT EXAM COLLECTION ALWAYS AVAILABLE OUR SITE IN TOP SIDE TAB "துறை தேர்வு "
Click Here 4 More Collection - "துறை தேர்வு "
10ம் வகுப்பு விடைத்தாள் நாசம்: ரயில்வே மீது வழக்கு
"பத்தாம் வகுப்பு விடைத் தாள்களை தவறவிட்ட, ரயில்வே நிர்வாகம் மீது
வழக்கு தொடரப்படும்" என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வைகைச்செல்வன்
கூறினார்.
சி.ஏ., - சி.டபிள்யூ.ஏ., - சி.எஸ்., பட்டங்கள்: டில்லி மாணவி சாதனை
டில்லியைச் சேர்ந்த மாணவி, 23 வயதிலேயே, சி.ஏ., - சி.எஸ்., -
சி.டபிள்யூ.ஏ., என, கணக்கியல் தொடர்பான, மூன்று பட்டங்களில், தேர்ச்சி
பெற்று சாதனை படைத்துள்ளார்.
அடிப்படை வசதிகள் இல்லாத அரசு உதவி பெறும் பள்ளிகள்
அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளி என மூன்று வகையாக
பள்ளிகள் செயல்படுகிறது. அரசு பள்ளிகளுக்கு அரசு அனைத்து விதமான கட்டுமான
வசதி, அடிப்படை வசதிகளை செய்கிறது.
பிள்ளைகளுக்கு ஆங்கிலம் கற்று கொடுங்கள்: சசி தரூர் "அட்வைஸ்"
"இன்றைய நவீன உலகில், வெற்றி பெற வேண்டுமானால், ஆங்கிலம் படிப்பது
மிகவும் அவசியம். இளம் தலைமுறைக்கு, ஆங்கிலம் கற்றுக் கொடுக்கவில்லை
என்றால், அவர்களின் எதிர்காலம், பாதிக்கப்படும்" என, மத்திய மனிதவளத் துறை
இணை அமைச்சர், சசி தரூர் கூறியுள்ளார்.
கல்விக்கு நிதி சேகரிக்க செருப்புகளுக்கு பாலிஷ் போடும் பேராசிரியர்
அனாதை குழந்தைகளின் படிப்புக்கு உதவுவதற்காக, கல்லூரி பேராசிரியர்
ஒருவர், ஊர் ஊராக சென்று, பொது மக்களின் ஷூ, செருப்புகளுக்கு பாலிஷ் போட்டு
நன்கொடை சேகரிக்கிறார்.
நாளை சட்டசபை கூட்டம் : மானிய கோரிக்கைகள் மீது விவாதம் ஆரம்பம் ,10ம் தேதி பள்ளி கல்வித்துறை மானிய கோரிக்கை
தமிழக அரசின் 20132014ம் ஆண்டுக்கான பட்ஜெட்
கடந்த 21ம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து 25ம்
தேதி முதல் 28ம் தேதி வரை 4 நாட்கள் சட்டசபையில் பொது விவாதம் நடந்தது.
பட்ஜெட் மீது நடந்த விவாதத்திற்கு நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 28ம்
தேதி பதில் அளித்தார். இதையடுத்து சட்டசபை கூட்டத்தை ஏப்ரல் 1ம் தேதிக்கு
சபாநாயகர் தனபால் தள்ளிவைத்தார்.
PAN CARD என்றால் என்ன? அதன் முக்கியதுவம் என்ன?
நிரந்தர கணக்கு அட்டை எனப்படும் பான் கார்டு
(Permanent Account Number-PAN)
நம்மில் பலரிடமும் உள்ளது ஆனால், பலருக்கும் இதன் முக்கியத்துவம் பற்றி தெரிவதில்லை. பான் கார்டு பற்றிய விரிவான தகவல்களும் அதனுடைய விளக்கங்களும் பற்றி பார்போம்.
1. PAN CARD என்றால் என்ன?
Permanent Account Number என்பதின் சுருக்கமே.
உலகசாதனையை முறியடித்த மாற்றுத்திறனாளி மாணவர் : உதவிகளை நாடி காத்திருப்பு
எறும்புக்கும் வாழ்க்கையுள்ள இந்த உலகில்
சாதிக்க ... ஊனம் ஒரு தடையே அல்ல... தன்னம்பிக்கையை இழந்தவர்கள் ஜெயிப்பது
இல்லை... ஜெயிப்பவர்கள் தன்னம்பிக்கையை இழப்பது இல்லை... பாராலிம்பிக்
போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற ஜெர்மனி வீரரின் சாதனையை
முறியடித்துள்ளார் சேலத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி வீரர் மாரியப்பன்... சேலம் மாவட்டம் பெரிய வடகம்பட்டியைச் சேர்ந்த
இந்த மாணவரின் பெயர் மாரியப்பன்.
அனைத்து வசதிகளையும் கொண்ட அதிசய கிராமம் கங்கதேவி பள்ளி
ஆந்திராவில், ஒரு அதிசய கிராமம் உள்ளது. அனைத்து உள்கட்டமைப்பு
வசதிகளுடன், 24 மணி நேர மின் வினியோகத்துடன், சுத்தம், சுகாதாரத்துடன்
விளங்கும் இந்த கிராமம், நாட்டின் முன்னணி கிராமங்களில் ஒன்றாக
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. பல விருதுகளைப் பெற்றுள்ள இந்த கிராமத்தின்
தலைவர், சந்திர மவுலி, நேபாள நாட்டின் சிறப்பு விருந்தினராக
அழைக்கப்பட்டுள்ளார்.
ஐஐடிக்களில் 43% காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்கள்
ஐஐடி மற்றும் என்ஐடிக்களில் 40 சதவீதத்துக்கு மேல் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கல்வித் தரம் முன்னேறி வந்தாலும்,
உலக அளவில் போட்டி போடும் அளவுக்கு இன்னமும் வளரவில்லை. உலக அளவில்
மாணவர்களை தயார் படுத்த உருவாக்கப்பட்டவையே ஐஐடி மற்றும் என்ஐடிக்கள்.
ஆனால், அவையும் எதிர்பார்த்த முன்னேற்றத்தைத் தரவில்லை.
"அரிதான நாணயங்கள் கிடைத்தால் உதாசீனப்படுத்தாதீர்"
"அரிதான நாணயங்கள் ஏதேனும் கிடைத்தால், அதை, தயவு செய்து நாணய ஆராய்ச்சி
செய்யும் அறிஞர்களின் கவனத்திற்கு, கொண்டு செல்லுங்கள். பழைய நாணயங்களை
உதாசீனப்படுத்தி, தமிழகத்தின் வரலாற்றை அழித்து விடாதீர்கள்" என, "தினமலர்"
நாளிதழ் ஆசிரியர், டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி வேண்டுகோள்
விடுத்துள்ளார்.
கல்லூரிகளை உடனே திறக்க மாணவர்கள் கூட்டமைப்பு வேண்டுகோள்
"மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, கல்லூரிகளை உடனடியாக திறக்க
வேண்டும்" என, மாணவர்கள் கூட்டமைப்பினர், அரசுக்கு கோரிக்கை
விடுத்துள்ளனர்.
வினாத்தாள் கண்காணிப்பு குழுவில் மாணவர்கள்
தமிழகத்தில் அரசு பொது தேர்வு வினாத்தாள் கண்காணிப்பு குழுவில், மாணவர்களும் இந்தாண்டு முதல், சேர்க்கப்பட்டுள்ளனர்.
"விடைத்தாள் சேதமான விவகாரத்தில் தேர்வுத்துறை மீது தவறில்லை"
"விடைத்தாள், ரயில் பாதையில் கிடந்த விவகாரத்தில், தேர்வு துறையின்
தவறுகள் எதுவும் இல்லை" என அமைச்சர் வைகை செல்வன் தெரிவித்துள்ளார்.
ரயில் பாதையில் 10ம் வகுப்பு விடைத்தாள் சிதறி கிடந்த அவலம்
பார்சலில் அனுப்பப்பட்ட, 10ம் வகுப்பு தமிழ் இரண்டாம் தாள் விடைத்
தாள்கள், ரயில் பாதையில் சிதறிக் கிடந்ததால், விருத்தாசலம் ரயில்
நிலையத்தில் பரபரப்பு நிலவியது.
கணித அருங்காட்சியகமாக உருமாறுகிறது கணிதமேதை ராமானுஜர் பிறந்த வீடு
ஈரோடு: ஈரோட்டில்
கணிதமேதை ராமானுஜர் பிறந்த வீடு, கணித அருங்காட்சியகமாக மாற்றப்படவுள்ளது.
புகழ் பெற்ற கணிதமேதை ராமானுஜர். இவர் பிறந்த வீடு ஈரோட்டில் உள்ளது. இந்த
வீட்டை தற்போது கணித அருங்காட்சியமாக மாற்றவுள்ளனர். இது குறித்து
புதன்கிழமை ஈரோடு மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கல்லூரிகள் ஏப்.1-ல் திறப்பு இல்லை?: தள்ளிப்போகிறது பல்கலை தேர்வுகள்
அரசிடமிருந்து எந்தவொரு தகவலும் இதுவரை
வராததால், கல்லூரிகள் திறப்பது பெரும்பாலும் ஏப்ரல் 1-ம் தேதி இருக்காது
என்று பல்கலைக்கழக துணைவேந்தர்களும், உயர் கல்வித் துறை அதிகாரிகளும்
தெரிவிக்கின்றனர்.இதன் காரணமாக ஏப்ரல் முதல் வாரத்தில் நடத்தப்பட இருந்த
பல்கலைக்கழகத் தேர்வுகள், தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள்
தெரிவிக்கின்றனர்.
ஏப்.1ம் தேதி முதல் பிபிஎப், மூத்த குடிமக்கள் சேமிப்புக்கு வட்டி குறைப்பு
வரும் 1ம் தேதி முதல், பிபிஎப் மற்றும் மூத்த
குடிமக்கள் சேமிப்பு திட்டத்துக்கான வட்டி 0.1 சதவீதம் குறைக்கப்படுகிறது
என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி
வெளியிட்டுள்ள அறிவிப்பு:






