Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு புதிய வசதி

          சென்னையில், வெள்ளம் பாதித்த பகுதிகள் குறித்த விவரங்களை அறிந்து கொள்ள, தமிழகத்தை சேர்ந்த, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இணைந்து, தகவல் தொடர்பு மையத்தை ஏற்படுத்தி உள்ளனர்.வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிக்கியவர்கள், உதவி கோரி தொடர்பு கொள்வதற்காக, பல துறைகள் சார்பில் தொடர்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. 

அத்தியாவசிய தேவைக்கு வரிசையில் நிற்கும் மக்கள்

         சென்னை :தென் சென்னையில், அத்தியாவசிய தேவை ஒவ்வொன்றுக்கும், நீண்ட வரிசையில் நின்று வாங்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. 
 

சுப்ரீம் கோர்ட்டின் 43வது தலைமை நீதிபதியாக தாக்குர்

      புதுடில்லி :சுப்ரீம் கோர்ட்டின், 43வது தலைமை நீதிபதியாக, திரத் சிங் தாக்குர், 63, நேற்று பதவியேற்றார்.சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக பணியாற்றிய எச்.எல்.தத்து, நேற்று முன்தினம் ஓய்வு பெற்றார்.
 

இன்றும் பொது விடுமுறை: அரசு அறிவுறுத்தல்

          சென்னை : கொட்டித்தீர்க்கும் கன மழை காரணமாக இன்று (டிச., 4) சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள தனியார் நிறுவனங்கள் பொது விடுமுறை அளிக்கும்படி தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. ஐ.டி., மற்றும் தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை விடுமுறை எடுக்கவோ அல்லது வீட்டில் இருந்தபடி பணி செய்யவோ அனுமதிக்க வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தி உள்ளது. நேற்றும் பொதுவிடுமுறைக்கு அரசு அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது

தமிழகத்தில் டிசம்பர் 11 வரை சுங்கக் கட்டணம் கிடையாது: நிதின் கட்கரி உத்தரவு

        வெள்ள நிவாரணப் பொருள்களை எடுத்துச் செல்வதற்கு உதவிடும் வகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் வரும் டிசம்பர் 11-ஆம் தேதி வரை சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படாது என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி உத்தரவிட்டுள்ளார்.
 

தமிழக அரசு இணையதளம் முடக்கம்

          தமிழக அரசு இணையதளம் நேற்று முடங்கியது.சென்னையில் மழை வெள்ளம் காரணமாக, மொபைல் போன் இணைப்புகள் செயல் இழந்துள்ளன. தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணைய தளமும் நேற்று இயங்கவில்லை. இதனால், அரசு செய்திக்குறிப்புகளை மக்கள் பார்க்க இயலவில்லை. இதேபோல், பெரும்பாலான இணையதளங்களை, மக்கள் நேற்று பார்க்க இயலவில்லை.

மத்திய அரசில் 7.47 லட்சம் பணியிடம் காலி: நிதித்துறையில் 46 சதவீத பணியாளர் இல்லை

      ராமநாதபுரம்,:மத்திய அரசுத்துறைகளில் 7.47 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. நிதித்துறையில் மட்டும் 46 சதவீத பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.மத்திய அரசில் 56 துறைகள், யூனியன் பிரதேசங்களின் அரசு துறைகள் மற்றும் டில்லி போலீஸ் துறைகளில் 40.48 லட்சம் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டு உள்ளன. இதில் சென்ற ஆண்டு வரை 33.01 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. 7.47 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன.

இன்று சிறப்பு ரயில்கள் இயக்கம்

        சென்னை எழும்பூர், சென்ட்ரலில் இருந்து பல்வேறு விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், பொது மக்களின் வசதிக்காக வெள்ளிக்கிழமை பாஸஞ்ஜர் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்தது.
 இது குறித்து வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

வெள்ளத்தில் சிக்கிய ரமணன்

       சென்னையில் வெள்ளத்தில் சிக்கிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர். ரமணன் பாதுகாப்பாக போலீஸாரால் மீட்கப்பட்டார்.

அண்ணா பல்கலை. நுழைவுத் தேர்வு ரத்து

     தொடர் மழை, அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக ஆராய்ச்சிப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வையும் அண்ணா பல்கலைக்கழகம் ரத்து செய்துள்ளது.

 

மது குடித்ததால் 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டமாணவியரை பள்ளியில் சேர்க்க நடவடிக்கை

          வகுப்பறையில் மது குடித்து, வாந்தி எடுத்து, மயங்கி விழுந்ததால், 'டிஸ்மிஸ்' செய்யப்பட்ட, நான்குமாணவியரை, மீண்டும் இன்று பள்ளியில் சேர்க்க, கலெக்டர் தட்சிணாமூர்த்திஉத்தரவிட்டுள்ளார்.
 

மேலும் ஒரு காற்று அழுத்த தாழ்வு

        வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள புதிய காற்று அழுத்த தாழ்வு நிலையால் டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில், கனமழை பெய்யும்' என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.வானிலை மைய இயக்குனர் ரமணன் நேற்று கூறியதாவது: 
 

டிச. 6 வரை பள்ளி கல்லூரி விடுமுறை

        வெள்ளப்பெருக்கால் சென்னை மாவட்ட பள்ளி, கல்லுாரிகளுக்கு டிச., 6 வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி நேற்று வெளியிட்டார்.விழுப்புரம் மற்றும் கடலுார் மாவட்ட பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
 

15 இளைஞர்கள் உருவாக்கிய 'கன்ட்ரோல் ரூம்'

         சென்னையில் வெள்ளத்தில் சிக்கியவர்களுக்கு உதவ, 15 இளைஞர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து, தனி கட்டுப்பாட்டு அறையை உருவாக்கியுள்ளனர். அவர்கள், அரசு அதிகாரிகளுடன் கைகோர்த்து, ஏராளமானோருக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். 

மழையால் பாதித்த பகுதி மக்களுக்கு உதவ ஆசிரியர்களுக்கு சிறப்பு அனுமதி தேவை - பாடசாலை கோரிக்கை




            தமிழகத்தில் கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலூர், சென்னை போன்ற பகுதிகளில் மழையின் பாதிப்புகள் மிக அதிக அளவில் உள்ளது. மேலும் சென்னையில் வழக்கத்தை விட 89 சதவீதம் அதிக மழை இதுவரை பெய்துள்ளது. மழையின் பாதிப்புகளினால் மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தமிழக அரசின் மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் வருவாய்த்துறையினர் உட்பட பல அரசு ஊழியர்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வருகின்றனர். 


தொடரும் மழை வெள்ளம்! மிதக்கும் வீடுகள்... ஆரோக்கியம் காப்பது எப்படி?

        மிழகத்தில், குறிப்பாக வட மாவட்டங்களில் ‘மழை பெய்தது’ என்று சொல்வதைவிட ‘மழை கொட்டியது’ என்று சொல்வதே பொருத்தம். சாலைகள் எங்கும் ஆறாக ஓடிய நீர், பல இடங்களில் இன்னும் இடுப்பு அளவு தேங்கிக்கிடக்கிறது. இப்படித் தேங்கிக்கிடக்கும் மழைநீரோடு கழிவு நீரும் கலந்துள்ளது என்பதுதான் வேதனை. மழைக்காலத்தில் தோன்றும் நோய்களும், உடல்நலத் தொந்தரவுகளும் எண்ணற்றவை. மழையின் உபவிளைவான மழைக்கால நோய்களிடம் இருந்து நம்மைப் பாதுகாக்க என்னென்ன செய்யலாம்...

சென்னை கனமழை: பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள்.

        வடகிழக்கு பருவமழையின் தீவிரத்தால், சென்னையில் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்து வருகிறது. தமிழகத்தின் கடற்கரையோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஏற்கனவே பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தேதி வாரியாக மழை எப்படி.

         டிச., 3, 4, 5: தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில், மிதமான மற்றும் மிக கன மழை பெய்யும். தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்யும். டிச., 6: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மற்றும் மிக கன மழை பெய்யும்.சென்னையில் மேக மூட்டத்துடன் காணப்படும். பல இடங்களில் கன மழை பெய்யும்; காற்று வேகமாக வீசும்.

The Shocking fact of Pay hike recommended by 7th Pay Commission

The Shocking fact of Pay hike recommended by 7th Pay Commission-COMPARISON OF PAY DETERMINATION BEFORE AND AFTER 7TH PAY COMMISSION

The Pay hike recommended by 7th Pay Commssion has been discribed as Bonanza by Media

வெள்ள சேத பகுதிகளை முதல்-அமைச்சர் ஜெயலலிதா பார்வையிட்டார்

     தமிழ்நாட்டில் கடந்த அக்டோபர் 28-ந்தேதி வடகிழக்கு பருவ மழை தொடங்கியது. தமிழ்நாடு முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்தாலும், சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களையும் புரட்டி போடும் வகையில் மழை கொட்டி தீர்த்துள்ளது. 

வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட பிரதமர் மோடி தமிழகம் வந்தார்

     சென்னை விமான நிலையம் குளம் போல காட்சி அளிப்பதால், புது தில்லியில் இருந்து தனி விமானத்தில் தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடி, அரக்கோணத்தில் உள்ள ராஜாளி விமான தளத்தில் வந்திறங்கினார்.
 

தனியார் பள்ளிக்கு சவால் விடலாம்!

           சமீபத்தில் அலகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த இரு தீர்ப்புகள் உத்தரப் பிரதேசக் கல்வித் திட்டத்தில் புயலைக் கிளப்பியிருக்கின்றன. இனி, அரசு ஊழியர்களின் குழந்தைகள் கட்டாயமாக அரசு தொடக்கநிலைப் பள்ளிகளில் தான் படிக்க வேண்டும் என்றது ஆகஸ்ட் மாதம் வெளியான தீர்ப்பு. 

டிசம்பர் 4ல் நடைபெற வேண்டிய அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுகள்மீண்டும் ஒத்திவைப்பு

       அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுகள் மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு முதல் மாத சம்பளம்: பீகார் துணை-முதல்வர் தேஜஸ்வி அறிவிப்பு



தன்னுடைய முதல் மாத சம்பளத்தை சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டமக்களின் நிவாரண நிதிக்காக வழங்குகிறார் பீகார் மாநில துணை முதல்-மந்திரியும், லாலு பிரசாத் யாதவின் மகனுமான தேஜஸ்வி இன்று அறிவித்துள்ளார்.


CTET Feb - 2016 Notification

சென்னை மழை: `பாதுகாப்பாக இருக்கிறேன்' வசதியை அறிமுகம் செய்தது பேஸ்புக்

    சென்னை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பேஸ்புக் உபயோகிப்பாளர்கள் தங்களது நிலை குறித்த தகவல்களை வெளி உலகுக்கு தெரிவிக்கும் வகையில் புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக இன்று (3-12-2015) விடுமுறை விடப்பட்டுள்ள மாவட்டங்கள் - 7



  1. திருவண்ணாமலை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  2. விழுப்புரம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  3. நாகை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  4. திருவள்ளுர் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை (3/12 & 4/12 Two Days)
  5. சென்னை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை (3/12 & 4/12 Two Days)
  6. காஞ்சிபுரம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை (3/12 & 4/12 Two Days)
  7. கடலூர்  பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை 
  8. புதுச்சேரி, காரைக்கால் - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தமிழக வெள்ள பாதிப்பு -முதல்வர் நிவாரண நிதி அனுப்பலாம்.

உதவும்  உள்ளம்  எனில் முதல்வர்  நிவாரண நிதி அனுப்பலாம்.

சென்னையில் எந்தெந்த சாலைகளில் வெள்ளம்? - நீங்களும் உதவலாம்!

சென்னையில் இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையால், பெரும்பாலான சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் நெட்டிசன்கள் மேப் மூலம் வெள்ளம் சூழ்ந்துள்ள சாலைகளை அடையாளம் காணக்கூடிய வசதியைச் செய்துகொடுத்துள்ளார்கள். இதன் மூலம் கிடைக்கும் தகவல், பின்னாளில் நகரை சீரமைப்பதற்கு மிகவும் உதவியாக இருக்கும். எப்படி உதவுவது?

சென்னைக்கு உதவும் கூகுள்

வடகிழக்குப் பருவ மழையால் சூறையாடப்பட்ட சென்னைக்கு உதவ முன்வந்துள்ளது ‘கூகுள்’ நிறுவனம். 1.8 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாகத் தெரிவித்திருக்கும் கூகுள், தனது முகப்புப் பக்கத்தில் உதவிக்கான பட்டனை வைத்துள்ளது. அவசர உதவிக்கான எண்கள், பாதுகாப்பான இடங்கள், மருத்துவ உதவிக்கான எண்கள் என அனைத்தும் அதில் இடம்பெற்றுள்ளது.

மாற்று குறையாத தங்கங்கள்: இன்று உலக மாற்றுத்திறனாளிகள் தினம்

             உடலளவில் பலவீனமாக இருந்தாலும், மனதளவில் மாற்றுத்திறனாளிகள் தைரியமாக உள்ளனர். இவர்களுக்குள் பல்வேறு திறமைகள் மறைந்து கிடக்கின்றன. மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான வசதிகளை செய்து தர வலியுறுத்தியும், அவர்களுக்கான உரிமைகளை வழங்க வலியுறுத்தியும் ஐ.நா., சார்பில் 1992ல் இருந்து டிச., 3ம் தேதி உலக மாற்றுத்திறனாளிகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
 

சிண்டிகேட் வங்கியில் சிறப்பு அதிகாரிக்கான காலி பணியிடங்கள் உள்ளதாக அந்நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

           சிண்டிகேட் வங்கியில் சிறப்பு அதிகாரிக்கான காலி பணியிடங்கள் உள்ளதாக அந்நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இதற்கான தகுதி, வயது வரம்பு உள்ளவர்கள் டிசம்பர் 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக 30 ரூபாய் ரீசார்ஜ் செய்து விடும் ஏர்டெல்

         வரலாறு காணாத கன மழையால் பாதிக்கப்பட்டு ரீசார்ஜ் கடைகளும் இல்லாமல்சரிவர இணைப்பும் கிடைக்காமல் பெரும் அவதிக்குள்ளாகி வரும் சென்னை வாசிகளுக்காக முன்னணி தொலை தொடர்பு நிறுவனமான ஏர்டெல் சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளது.இதன்படி, 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive