NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பிளஸ் 2 செய்முறைத் தேர்வு: பிப்ரவரி 1ம் தேதி துவக்கம்


          தமிழகம் முழுவதும், பிளஸ் 2 செய்முறைத் தேர்வு, நாளை துவங்குகிறது. 4 லட்சம் மாணவ, மாணவியர், செய்முறைத் தேர்வில் பங்கேற்கின்றனர். இந்த தேர்வுப் பணிகளில், முதுகலை ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


            பிளஸ் 2 பொதுத் தேர்வு, மார்ச், 1ல் துவங்கி, 27 வரை நடக்கிறது. 8 லட்சம் மாணவ, மாணவியர், இத்தேர்வை எழுதுகின்றனர். இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வரும் நிலையில், செய்முறைத் தேர்வு, நாளை துவங்குகிறது.

          மாவட்ட வாரியாக, மாணவ, மாணவியரின் எண்ணிக்கைக்கு ஏற்ப, பல கட்டங்களாக, செய்முறைத் தேர்வை நடத்தி முடிக்க வேண்டும் என, தேர்வுத்துறை அறிவுறுத்தி உள்ளது. முதல்கட்ட பட்டியலில் உள்ள பள்ளிகளில், நாளை துவங்கி, ஒரு வாரம் வரை, செய்முறைத் தேர்வு நடக்கிறது.

             ஒட்டுமொத்தமாக, 4 லட்சம் மாணவ, மாணவியர், இத்தேர்வில் பங்கேற்கின்றனர். 150 மதிப்பெண்களுக்கு, எழுத்துத் தேர்வு நடக்கிறது. இதில், 50 மதிப்பெண்களுக்கு மட்டும், செய்முறைத் தேர்வு நடக்கும். இந்த தேர்வுப் பணிகளில், முதுகலை ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive