Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தொடக்க கல்வித் துறையில் 2004-ம் ஆண்டு முதல் பணி நியமனம் செய்யப்பட்டு பதவி உயர்வின்றி தவிக்கும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள்

 
          தமிழகத்தில் கடந்த 2004-ம் ஆண்டு முதல் தொடக்கக் கல்வித் துறையில் பணி நியமனம் பெற்றுள்ள 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.

தொடக்க கல்வித் துறையில் பதவி உயர்வின்றி தவிக்கும் பட்டதாரி ஆசிரியர்கள்

         தமிழகத்தில் கடந்த 2004-ம் ஆண்டு முதல் தொடக்கக் கல்வித் துறையில் பணி நியமனம் பெற்றுள்ள 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.தமிழகத்தில் கடந்த 2004-ம் ஆண்டு முதல் தொடக்கக் கல்வித் துறையில் பணி நியமனம் பெற்றுள்ள 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.

            தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளின் கல்வித் தரத்தை உயரத்தும் வகையில், பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க கடந்த 2004-ம் ஆண்டு அரசு உத்தரவிட்டது. அதன்படி, கடந்த 2004-ம் ஆண்டு முதல் தொடக்கக் கல்வித் துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறையில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு கடந்த 2006, ஜூன் மாதம் முதல் காலமுறை ஊதியம் வழங்கப்பட்டது.

                 சம கல்வித் தகுதி, பணி, ஊதியம் மற்றும் தேர்வு முறை இருந்த போதும் ஆசிரியர் தேர்வு வாரிய தர எண்ணை கருத்தில் கொள்ளாமல், பள்ளிக் கல்வித் துறையில் வழங்குவது போல, தொடக்க கல்வித் துறையில் பணி நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படுவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது. தொடக்கக் கல்வித் துறையில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஓரே பதவி உயர்வான நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வும், தற்போது ஒவ்வொரு ஆண்டும் 100-க்கும் மேற்பட்ட நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுவதால் பதவி உயர்வு என்பது கனவாகி விட்டதாக பட்டதாரி ஆசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தரம் உயர்த்தப்படுóம் உயர்நிலைப் பள்ளிகளில் பணியாற்றி வரும் பட்டதாரி ஆசிரியர்கள், பள்ளிக் கல்வித் துறையில் இளையவராக கருதப்படுவதால் பதவி உயர்வு பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

                  இது குறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்  கூட்டமைப்பின்  செயலர்  கூறும் போது, கடந்த 1981-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணை எண் 720-ல் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறலாம் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. அப்போது 9 மற்றும் 10-ஆம் வகுப்புகளுக்கு மட்டுமே பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். 2004-ம் ஆண்டு முதல் தொடக்கக் கல்வித் துறை மூலம் 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இதற்கேற்ப பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வில் அரசாணையில் திருத்தம் செய்யப்படவில்லை.

                    அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் கடந்த 2003-ம் ஆண்டு முதல் ஆசிரியர் பயிற்றுநர்கள் நியமிக்கப்பட்டனர். ஆசிரியர் பயிற்றுநர்கள் பதவி உயர்வு பெறுவதற்கு சிறப்பு அரசாணை வெளியிடப்பட்டது. கடந்த 2006-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற ஆசிரியர் போட்டித் தேர்வில் 2-ஆம் பட்டியலில் தேர்வு செய்யப்பட்ட 2,500-க்கும் மேற்பட்டோர் ஆசிரியர் பயிற்றுநராக நியமிக்கப்பட்டு பதவி உயர்வுக்கான வாய்ப்பை பெற்றுள்ளனர். இதே தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று முதல் பட்டியலில் தேர்வான பட்டதாரி ஆசிரியர்கள் தொடக்கக் கல்வித் துறையில் பணி நியமனம் செய்யப்பட்டதால் பதவி உயர்வுக்கு வழியின்றி தவித்து வருகின்றனர்.

               தொடக்க கல்வித் துறையில் பணியாற்றி வரும் பட்டதாரி ஆசிரியர்களின் நலன் கருதி அரசாணை 720-ல் திருத்தம் செய்யவும், தொடக்க கல்வித் துறை, பள்ளிக் கல்வித் துறை என்ற வேறுபாடின்றி, ஆசிரியர் தேர்வு வாரிய தர எண் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive