Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தமிழகத்தில் டைப்ரைட்டிங் தேர்வுகள் ஆரம்பம்: இன்று சீனியர் பிரிவு மாணவர்கள் பங்கேற்பு


             தமிழகத்தில் டைப்ரைட்டிங் தேர்வுகள் நேற்று ஆரம்பமானது. இன்று (1ம் தேதி) சீனியர் பிரிவு தேர்வுகள் நடக்கிறது.

              தமிழகத்தில் தமிழ், ஆங்கிலம் டைப்ரைட்டிங் தேர்வுகள் கடந்த 24 மற்றும் 25ம் தேதிகளில் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் டி.என்.பி.எஸ்.சி தேர்வை முன்னிட்டு இத்தேர்வு நாட்கள் மாற்றப்பட்டது.

               நேற்று தமிழ், ஆங்கிலம் டைப்ரைட்டிங் ஜூனியர் பிரிவு 4ம் பேட்ஜ் வரை காலை 9.30 மணி முதல் மாலை 4.05 மணி வரை தேர்வுகள் நடந்தது. இன்று (1ம் தேதி) தமிழ், ஆங்கிலம் ஜூனியர் பிரிவு 5ம் பேட்ஜ்க்கு காலை 8.30 மணி முதல் 9.35 மணி வரையிலும், தொடர்ந்து காலை 10.20 மணி முதல் 3.20 மணி வரை சீனியர் பிரிவுக்கு தேர்வு நடக்கிறது.

                காலை 10.20 மணி முதல் 12.20 மணி வரை டைப்ரைட்டிங் தமிழ், ஆங்கிலம் ஹை ஸ்பீடு தேர்வுகளும், மாலை 3.50 மணி முதல் 4.40 மணி வரை டைப்ரைட்டிங் தமிழ், ஆங்கிலம் ப்ரீ-ஜூனியர் பிரிவுக்கும் தேர்வு நடத்தப்படுகிறது.

                  இத்தேர்வில் தமிழகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட மையங்களில் சுமார் 54 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

                   நெல்லை மாவட்ட பகுதிகளை சேர்ந்த தேர்வர்களுக்கு செய்துங்கநல்லூர் செயின்ட் சேவியர் பாலிடெக்னிக், சங்கர்நகர் சங்கர் பாலிடெக்னிக், சேரன்மகாதேவி ஸ்காட் பாலிடெக்னிக், தென்காசி செந்தில் ஆண்டவர் பாலிடெக்னிக், வடக்கன்குளம் எஸ்.ஏ ராஜா பாலிடெக்னிக் ஆகிய மையங்களில் இத்தேர்வுகள் நடந்தது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive