NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஊனத்தினால் மாற்றுப்பணி பெற்றவர்கள் பதவி உயர்வு பெறுவது தொடர்பாக அரசு பிறப்பித்த நிபந்தனை ரத்து ஐகோர்ட்டு உத்தரவு

 
      உடல் ஊனத்தினால், மாற்றுப்பணி பெற்றவர்கள், புதிய பணியில் இருந்துதான் பதவி உயர்வு கோர முடியும் என்ற தமிழக அரசின் நிபந்தனையை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

             சென்னை ஐகோர்ட்டில் கல்வித்துறையில் பணியாற்றும் வி.ஜனாகிராமன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

மாற்றுப்பணி

           பள்ளிக் கல்வித்துறையில் 2003-ம் ஆண்டு இளநிலை உதவியாளர் பணியில் சேர்ந்தேன். இதன்பின்னர், எனக்கு பார்வை குறைபாடு ஏற்பட்டதால், மாற்றுப்பணியாக டெலிபோன் ஆப்ரேட்டர் பணி வழங்கப்பட்டது. இதற்கிடையில், உதவியாளர் பதவி உயர்வுக்கு, இளநிலை உதவியாளர் பெயர் பணி மூப்பு பட்டியலை அதிகாரிகள் தயாரித்தனர்.

               இந்த பட்டியலில் என் பெயரை சேர்க்கும்படி 2011-ம் ஆண்டு ஜூன் மாதம் மனு கொடுத்தேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எனக்கு பதவி உயர்வு வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

கேட்க முடியாது

               இந்த மனுவுக்கு, பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் பதில் மனு தாக்கல் செய்தார். அதில், ‘மனுதாரர் இளநிலை உதவியாளர் பணியில் இருந்து டெலிபோன் ஆப்ரேட்டர் என்ற மாற்றுப்பணி பெற்றுள்ளார். தமிழக அரசு 23-2-2009 அன்று பிறப்பித்த அரசாணையின்படி, அவர் டெலிபோன் ஆப்ரேட்டர் பதவியில் இருந்துதான் பதவி உயர்வு பெறமுடியும். ஏற்கனவே வகித்த பதவியில் இருந்து பதவி உயர்வு கேட்க முடியாது’ என்று கூறியிருந்தார்.

               இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சசிதரன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

அரசின் கடமை

                இந்த வழக்கில் உதவியாளர் பதவி உயர்வு பெற மனுதாரருக்கு தகுதி உள்ளதா, இல்லையா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதேபோன்ற கோரிக்கையுடன் 2009-ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கை விசாரித்த இந்த ஐகோர்ட்டின், முழு டிவிஷன் பெஞ்ச், பணியில் இருக்கும்போது உடல் ஊனமுற்று, மாற்றுப்பணி பெற்றவருக்கு பதவி உயர்வு மற்றும் அதற்கு ஏற்ற சம்பள உயர்வு பெற தகுதி உள்ளது என்று தீர்ப்பளித்துள்ளது.

           மனுதாரருக்கு கண் பார்வை பாதிக்கப்பட்டதால், அவருக்கு மாற்றுப்பணி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு பணி வழங்குவது அரசின் கடமையாகும்.

நிபந்தனை ரத்து

           அதற்காக, அவர் பதவி உயர்வு கோர முடியாது என்று கூறுவதை ஏற்க முடியாது.

                 மேலும், மாற்றுப்பணி வழங்கும்போது, அந்த மாற்றுப்பணியில் பணி மூப்பு பட்டியலில் கடைசியாக பெயர் சேர்க்கப்பட்டு, அந்த பணியில் இருந்துதான் பதவி உயர்வு பெறமுடியும் என்றும் ஏற்கனவே வகித்த இளநிலை உதவியாளர் பதவியில் இருந்து பதவி உயர்வு கோர முடியாது என்றும் 23-2-2009 அன்று தமிழக அரசு பிறப்பித்த அரசாணை, மாற்றுத்திறனாளி சமவாய்ப்பு, பாதுகாப்பு மற்றும் முழு பங்களிப்பு சட்டத்துக்கு எதிராக உள்ளது. எனவே இந்த அரசாணையில் கூறப்பட்டுள்ள நிபந்தனையை ரத்து செய்கிறேன்.

பரிசீலிக்கவேண்டும்

                 மனுதாரர் ஏற்கனவே பதவி உயர்வு கேட்டு 24-6-2011 அன்று கோரிக்கை மனு கொடுத்துள்ளார். அந்த கோரிக்கை மனுவை, மாற்றுத்திறனாளி சமவாய்ப்பு, பாதுகாப்பு மற்றும் முழு பங்களிப்பு சட்டத்தின் அடிப்படையில் பரிசீலித்து தகுந்த உத்தரவினை பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் 8 வாரத்துக்குள் பிறப்பிக்கவேண்டும்.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive