NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மருத்துவக் கலந்தாய்வில் கடந்த ஆண்டு மாணவர்களுக்கு அனுமதி: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

     எம்.பி.பி.எஸ். மற்றும் பிடிஎஸ் உள்ளிட் மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வில் கடந்த ஆண்டு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பங்கேற்பதை எதிர்த்து தொடரப்பட்ட மனுவினை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

       இந்த ஆண்டு கட் ஆப் மதிப்பெண் குறைந்திருப்பதால், கடந்தாண்டு மாணவர்களை கலந்தாய்வில் பங்கேற்க அனுமதித்தால், இந்த ஆண்டு படித்த மாணவர்களுக்கான வாய்ப்புபாதிக்கப்படும் என்று கூறி 63 மாணவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

         இது தொடர்பான வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருந்த போதே மருத்துவக்கலந்தாய்வை நடத்த அனுமதித்த சென்னை உயர்நீதிமன்றம், பழைய மாணவர்களும் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதித்தது.

          ஆனால், இட ஒதுக்கீட்டு ஆணையை மட்டும் வழங்க தடை விதித்திருந்தது.இந்நிலையில் இன்று இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மருத்துவக் கலந்தாய்வு தொடர்பான தமிழக அரசின் சட்டம் எதிர்க்கப்படவில்லை என்றும்,தமிழக அரசின் சட்டப்படி முன்னாள் மாணவர்கள் பங்கேற்க அனுமதி அளிப்பதாகவும் அறிவித்தது. மேலும் நடப்பு மாணவர்கள் 63 பேரின் மனுக்களை தள்ளுபடி செய்தது உத்தரவிட்டது.இதனிடையே தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வு நேற்று நிறைவடைந்தது. 20 அரசு மருத்துவக் கல்லூரிகள், ஒரு அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் 8 தனியார் மருத்துவக் கல்லூரிகளிலுள்ள 2 ஆயிரத்து 939 இடங்களும் நிரம்பின. இதில் கடந்தாண்டு மாணவர்கள் 500க்கும் மேற்பட்டோருக்கு இடம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive