NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஏழு ஆண்டுகளாக சம்பள உயர்வின்றி தவிக்கும் கல்வித்திட்ட ஊழியர்கள்

       :தமிழகத்தில் கடந்த 7 ஆண்டுக்கு முன் பணியில் சேர்ந்து சம்பள உயர்வின்றி தவிப்பதாக அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்ட( ஆர்.எம்.எஸ்.ஏ.,) ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
 
          அனைத்து குழந்தைகளும் கட்டாயம் 8ம் வகுப்பு வரை படிப்பதை வலியுறுத்தும் எஸ்.எஸ்.ஏ., கல்வி திட்டத்தை மத்திய அரசு 2002ல் கொண்டு வந்தது. இதையடுத்து, அனைவரும் அவசியம் 10ம் வகுப்பு படிக்கும் நோக்கில் அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தை 2007ல் கொண்டுவந்தது. இத்திட்டம் மூலம் தரம் உயர்த்தப்பட்ட அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான சம்பளம், மாதிரி பள்ளிகளை நிர்வகித்தல், கூடுதல் கட்டடம், அடிப்படை வசதி செய்தல் போன்றவற்றிற்கு மூன்று பிரிவுகளில் நிதி ஒதுக்கீடு செய்கின்றனர். 
 
            இத்திட்டத்தை செயல்படுத்த மாவட்டந்தோறும் கம்ப்யூட்டர் ஆபரேட்டர், கணக்கு அதிகாரி, பொறியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். முறையே இவர்களுக்கு ரூ.6 ஆயிரம், 7,500, 12,000 சம்பளம் வழங்கப்படுகிறது.தமிழக அளவில் 1,500 பேர் பணிபுரிகின்றனர். கடந்த 7 ஆண்டாக இவர்கள் சம்பள உயர்வின்றி பணிசெய்வதாக புலம்பி தவிக்கின்றனர்.இது குறித்து ஆர்.எம்.எஸ்.ஏ., ஊழியர்கள் கூறியதாவது: 2007ல் இத்திட்டம் துவங்கிய போது பி.எட்., பி.இ., முடித்தவர்கள் பணியில் சேர்ந்தோம். பணி நிரந்தரம் என எண்ணினோம். ஆனால் 7 ஆண்டாக சம்பள உயர்வில்லை. பள்ளி கல்வித்துறையில் பல முறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை, என்றனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive