Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசின் புதிய கல்விக்கொள்கை; பள்ளி கல்லூரிகளுக்கு உத்தரவு

          மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்து மாணவ, மாணவியரின்  கருத்துகளை கட்டாயம் பெற வேண்டும் என, பள்ளி கல்லூரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. 

         மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை, அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவான கல்விக் கொள்கையை அமல்படுத்தத் திட்டமிட்டு, பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி தொடர்பான வரைவு கொள்கையை வெளியிட்டு உள்ளது. இதுதொடர்பாக, அனைத்து மாநிலங்களிலும் கருத்துக்கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டு, பொதுமக்கள் மற்றும் கல்வியாளர்களின் கருத்துகள் பெறப்பட்டு உள்ளன. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் தான், புதிய கல்விக்கொள்கையால் பயனடையப் போகின்றனர் என்பதால், அவர்களின் கருத்துகள் மிக முக்கியம் என, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை தெரிவித்துள்ளது. எனவே, மாணவ,மாணவியரிடம் கருத்துகளை பெற்று, ஆன்லைன் பதிவு செய்ய வேண்டும் எனப் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளது. மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,பள்ளிகளில், வரும் 5ம் தேதிக்குள், மாணவ, மாணவியரின் கருத்துகளை பெற உத்தரவிடப்பட்டு உள்ளது.




2 Comments:

  1. அரசு பள்ளி மாணவர்களின் கணினி கனவு

    அரசு பள்ளியில் பயிலும் ஏழை எளிய கிராமப்புற மாணவர்கள் கல்வித் தரத்தை உயர்ந்தும் நோக்கிலும் அரசு பள்ளி மற்றும் மாணவர்களின் எதிர் காலத்தை கருத்தில் கொண்டு "ஆரம்ப கல்வி முதல் (ஒன்றாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை)
    கணினி கல்வியாக கட்டாயக்கல்வியாக கொண்டுவர வேண்டும் .

    மேனிலைப்பள்ளி தற்போது தரம் உயர்த்தப்பட்ட மேனிலைப்பள்ளிகளில் (11மற்றும் 12ஆம் வகுப்பு) பல பள்ளியில் கணிப்பொறி அறிவியல் பாடம் இல்லை. ஆசிரியர்களும் இல்லை கணிப்பொறி அறிவியல் பாடம் கொண்டு வரவேண்டும்.
    றகுறிப்பு(அரசு பள்ளியில் மாணவர்கள்
    அதிகம் கணினி அறிவியல் பாடத்தைத் தேர்வு செய்கின்றனர்).

    மாணவர்களின் விகிதம் அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும்.
    குறிப்பு(300க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் அரசு மேனிலைப்பள்ளியில் ஒரு கணினி ஆசிரியர் மட்டும் உள்ளார்).

    சமச்சீர் கல்வியில் 6 முதல் 10 வகுப்பு வரை கணினி அறிவியல் பாடம் புத்தகங்கள் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டது மாணவர்கள் மத்தியில் பெறும் வரவேற்ப்பை பெற்றது ஆனால் சில மாதத்தில் கைவிடப்பட்டது.
    (அனைத்து தனியார் பள்ளிகளிலும் கணினி அறிவியல் பாடம் கட்டாயப்பாடமாக உள்ளது).

    மாணவர்களின் நலனுக்காக....
    புதிய கல்விக் கொள்கையில் கணினி அறிவியல் பாடத்தை கட்டாயப்பாடமாக அறிவிக்க வேண்டும். (December ல் புதிய கல்வி கொள்கை _ ஸ்மிருதி இரானி உறுதி . மக்களிடம் கருத்துக் கேட்கப் படும் என அறிவிப்பு தங்கள் ஒருவரின் உதவியால் கூட1 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வரைகணினி அறிவியல் கல்வியை தமிழகத்தில் கொண்டுவர முடியும்).


    DIGITAL இந்தியா திட்டத்தில் கீழ் கணினி அறிவியல் பாடத்தை ஒன்றாம் வகுப்பு முதல் கட்டயப்படமாக கொண்டுவரவேண்டும்.
    (இந்தியாவின் வாழும் கோடிக்கணக்காண ஏழை எளிய கிராமப்புற மாணவர்கள் பயன் பெறுவர்).


    21000 பி.எட கணினி ஆசிரியர்கள் உள்ளனர் .
    அனைவரும் (TNTEU)பட்டம் பெற்றோம் .(21000 பெற்ற பட்டம் பயன் இல்லாமல் வறுமையில் வாடுகின்றோம் )
    1)TET ,TRB போன்ற ஆசிரியர் தகுதித் தேர்வு இல்லை.
    2) AEEO, DEO தேர்வுக்கு அடிப்படை கல்வி B.ED. கணினி அறிவியல் B.ED பெற்ற அதிலும் எங்களுக்கு வாய்ப்பு இல்லை.
    3)பகுதிநேர ஆசிரியர்கள் பணியிலும் எங்களுக்கு வாய்ப்புகள் இல்லை.

    திரு வெ.குமரேசன் -9626545446(மாநில செயலாளர் ) 
    தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்.
    �லட்சியம் வெல்லும் நிச்சயம்�

    ReplyDelete
  2. Computer education must be compulsory to all school children

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive