'கலைப்
பாட தொழில்நுட்பத் தேர்வுகளுக்கு, மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு வழங்க
வேண்டும்' என, அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அரசுப்
பள்ளிகளில் கலை, ஓவியம், இசை, கணிதம் உள்ளிட்ட, சிறப்புப் பாடங்கள் உள்ளன;
இவற்றை கற்பிக்க, சிறப்பாசிரியர்கள் உள்ளனர். கலைப் பாடம்
படித்துள்ளதுடன், தமிழக அரசு நடத்தும், தொழில்நுட்பத் தேர்விலும் தேர்ச்சி
பெற்றால் தான், சிறப்பாசிரியர் பணி கிடைக்கும்.
அதன்படி,
தொழில்நுட்ப தேர்வுக்கு, 14ம் தேதி, விண்ணப்பப் பதிவு துவங்கியது; 20ல்
முடிந்தது. இந்நிலையில், தேர்வு முடிவுக்கு பின், மறுகூட்டல் மற்றும்
மறுமதிப்பீடு முறையை அமல்படுத்த வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, கலை ஆசிரியர்கள் நல சங்க தலைவர் ராஜ்குமார், செயலர் சாந்தகுமார் ஆகியோர், அரசு தேர்வுத்துறை இயக்குனர் (பொறுப்பு) வசுந்தராதேவியை சந்தித்து மனு அளித்து
உள்ளனர்.
இதுகுறித்து, கலை ஆசிரியர்கள் நல சங்க தலைவர் ராஜ்குமார், செயலர் சாந்தகுமார் ஆகியோர், அரசு தேர்வுத்துறை இயக்குனர் (பொறுப்பு) வசுந்தராதேவியை சந்தித்து மனு அளித்து
உள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...