Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆசிரியர்களுக்கு பொது மாறுதல்,பதவி உயர்வு கலந்தாய்வு

          திருவள்ளூர் மாவட்டத்தில் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல், பதவி உயர்வு வழங்க அக்டோபர் 26, 27, 30 ஆகிய தேதிகளில் கலந்தாய்வு நடைபெறவுள்ளது.இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

          திருவள்ளூர் மாவட்டத்தில் 2015-16ஆம் ஆண்டுக்கு அரசு, நகராட்சி உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணி புரியும் பட்டதாரிஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் நிலை-2க்கான பொது மாறுதலும், இடைநிலை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர், சிறப்பாசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்க கலந்தாய்வும், திருநின்றவூரில் உள்ள ஜெயா மெட்ரிக்.மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளன.

26-ஆம் தேதி பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் நிலை-2 ஆகியோருக்கு மாவட்டத்துக்குள் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறும்.வரும் 27-ஆம் தேதி ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறும். வரும் 30-ஆம் தேதி இடைநிலை, உடற்கல்வி, சிறப்பாசிரியர்களில் இருந்து பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்க கலந்தாய்வு நடைபெறும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive