நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி
நாளாகும். நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகள்,
நிகர்நிலை பல்கலைகழகங்களில் உள்ள எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ்
படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை மத்திய அரசு
கட்டாயமாக்கியுள்ளது.
இதனையடுத்து இந்த ஆண்டு நீட் தேர்வு
எழுதுவோர் www.cbseneet.nic.in என்ற இணையத்தளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என
அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக ஆன்லைன் மூலம் விண்ணபிக்கும் முறை கடந்த
ஜனவரி மாதம் 31-ம் தேதி துவங்கியது.
மே மாதம் 7-ம் தேதியன்று நீட் தேர்வு
நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க
நாளை கடைசி நாள் ஆகும். நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க
கோரும் சட்ட மசோதாவிற்கு இன்னும் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளிக்கவில்லை
என்பது குறிப்பிடத்தக்கது.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...