NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

டெங்கு காய்ச்சல் விவரங்களை தெரிவிக்க வேண்டும்: தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு உத்தரவு

டெங்கு காய்ச்சல் சிகிச்சை பெறுவோரின்
விவரங்களை தனியார் மருத்துவமனைகள் உடனடியாக அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என சுகாதாரத் துறை முதன்மைச் செயலர்
ஜெ.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தினார்.
பெருநகர சென்னை மாநகராட்சியின் பொது சுகாதாரத் துறை சார்பில் வடகிழக்குப் பருவமழை காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய டெங்கு, பன்றிக் காய்ச்சல் தடுப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டம், ரிப்பன் மாளிகையில் புதன்கிழமை நடைபெற்றது. 
இந்தக் கூட்டத்துக்குத் தலைமை வகித்த சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன் பேசியது:
சென்னையில் தற்போது பருவநிலை மாறி வருவதால் காய்ச்சல், சளி, இருமல் ஆகியவை ஏற்பட வாய்ப்புள்ளது. 
இதுபோன்ற அறிகுறிகள் தொடர்ந்து இரண்டு நாள்களுக்கு மேல் இருப்பவர்களுக்கு உரிய சிசிச்சை அளிக்க வேண்டும். டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் வருபவர்களுக்கு தனி வார்டில் சிகிக்சை அளிக்க வேண்டும். 
மேலும், அவர்கள் குறித்த விவரங்களை சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனைகள் உடனடியாக அரசுக்குத் தெரிவிக்க வேண்டும்.
பருவமழையையொட்டி, சென்னை மாநகராட்சி சுகாதார நிலையங்களில் நோய்த் தடுப்பு மருந்துகள் போதிய அளவில் இருப்பில் உள்ளனவா என்பதை சுகாதாரத் துறை அதிகாரிகள் உறுதி செய்து கொள்ள வேண்டும். 
நோய்த் தடுப்பு தொடர்பான அனைத்து உதவிகளையும் செய்ய தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் போதிய மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றார்.
இந்தக் கூட்டத்தில் நோய்த் தடுப்பு, மருந்துத் துறை இயக்குநர் டாக்டர் குழந்தைசாமி, பெருநகர சென்னை மாநகராட்சி மாநகர நல அலுவலர் டாக்டர் செந்தில்நாதன், மாநகராட்சி சுகாதார அலுவலர்கள், தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive