NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஏன் மேல் நோக்கி நெருப்பு எரிகிறது?

விளக்கின் எல்லாச் சுடர்களும் மேல்நோக்கியே எரிகின்றதே எப்படி? ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி அதைத் தலைகீழாகப் பிடித்தாலும் புவியீர்ப்பு விசையையும் மீறி, அதன் சுடர் மேல்நோக்கித்தான் எரிகிறது. நெருப்பின் சக்தி புவியீர்ப்பு விசையை விடப் பெரிதா?
நெருப்பு என்பது ஒரு வேதிச் செயல்பாடு (Chemical process) அந்தச் செயல்பாடு நடைபெற மூன்று விஷயங்கள் தேவை. 1.வெப்பம்.2.எரிபொருள். 3. ஆக்சிஜன்.
இந்த மூன்றில் ஏதேனும் ஒன்று இல்லை என்றாலும் நெருப்பு உருவாகாது.
எந்த ஒரு வேதிச் செயல்பாட்டிலும் சக்தி (energy) உருவாகும். அந்தச் சக்தி சிலவற்றில் வெளியே வரும். சிலவற்றில் உள்வாங்கிக் கொள்ளப்படும்.
நெருப்பு என்னும் வேதிச் செயல்பாட்டில் வெப்பம் என்ற சக்தி வெளியே வருகிறது.அது நெருப்பைச் சுற்றியுள்ள காற்றைச் சூடேற்றுகிறது.
காற்றின் எடையை விட (Density) (ஆமாம், காற்றுக்கும் எடை உண்டு. 30 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் உள்ள அறையில், ஒரு தபால்தலை அளவில் உள்ள இடத்தில் சுமார் 7 கிலோ காற்று இருக்கும்)
வெப்பக் காற்றின் எடை அல்லது எரியும் வாயுக்களின் எடை குறைவாக இருப்பதால் அவை மேல்நோக்கி எழும். எடை குறைவானவை மேல்நோக்கிச் செல்லும். எடை அதிகமானவை கீழ்நோக்கிச் செல்லும்.
தண்ணீர் கனமானது. அதனால் மேல்நோக்கிச் செல்ல முடியாது. தண்ணீரைக் கொதிக்க வைத்தால் வெளிப்படும் நீராவி லேசானது. அது மேல்நோக்கிச் செல்லும்.
அதே போல வெப்பக் காற்று எப்போதும் மேல்நோக்கியே எழும்.அதனால்தான் பெரிய பெரிய பலூன்கள் பறக்கின்றன.
வெப்பக் காற்று மேலே செல்வதால் அங்கு காற்று இருந்த இடம் காலியாகிறது. காலியிடத்தை நிரப்ப அதை நோக்கிச் சுடருக்கு மேல்பகுதியில் உள்ள காற்றை இழுக்கிறது புவியீர்ப்பு விசை. நெருப்பின் அருகில் வந்ததும் அந்தக் காற்றும் சூடாகி மேலே போகிறது. இப்படி தொடர்ந்து நோக்கிச் சென்று கொண்டிருக்கும் வெப்பக் காற்று, தான் போகும் திசையை நோக்கிச் சுடரை இழுக்கிறது. அதனால்தான் சுடர் ஒரு மொட்டுப் போல, மேல்நோக்கிக் குவிந்து நமக்குத் தோன்றுகிறது,.
புவியீர்ப்பு விசை இல்லாத இடத்திலும் சுடர் இப்படித்தான் மொட்டுப் போல இருக்குமா?

அங்கு சுடர், முட்டை வடிவில் மொட்டுப் போல மேல்நோக்கிக் கூம்பியில்லை. மாறாக, அது குடை வடிவில் வட்டமாக இருந்தது. ஏன்?ஏனென்றால் அங்கு புவியீர்ப்பு விசை இல்லை.
அதனால் சுடரின் மேல் உள்ள காற்று இழுக்கப்படவில்லை. மாறாக வெப்பத்தினால் காற்று மேலே செல்வதால் ஏற்பட்ட காலியிடத்தை நிரப்ப எல்லாத் திசைகளிலிருந்தும் காற்று விரைந்தோடி வந்தது. அதனால் மொட்டுச் சுடர் வட்டச் சுடராகி விட்டது.
இந்தியக் கலாச்சாரத்தில் மட்டுமல்ல, உலகில் உள்ள பல கலாச்சாரங்களில் நெருப்பைக் கடவுள் அல்லது கடவுள் தந்த பரிசு என்று நினைக்கிறார்கள். ஏனெனில் சூரியனுக்கு அடுத்தபடியாக மக்கள் பயன்படுத்தும் சக்தி நெருப்புதான். ஆனால் அது வெறும் வாயுக்கலவை! (gases!)




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive