NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக விரிவுரையாளர் பணிக்கு, 2,311 பேரை தேர்வுசெய்ய நடவடிக்கை!

th%252811%2529

''அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் பணிபுரியும், கவுரவ விரிவுரையாளர்களை, பணி நிரந்தரம் செய்யும் திட்டம், அரசின் பரிசீலனையில் உள்ளது,'' என, உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:

அ.தி.மு.க., - ராமச்சந்திரன்: அரியலுார் மாவட்டம், செந்துறையில் கலைக் கல்லுாரி துவக்க, அரசு ஆவன செய்யுமா?

அமைச்சர் அன்பழகன்: கருத்துரு எதுவும் அரசின் பரிசீலனையில் இல்லை.

ராமச்சந்திரன்: செந்துறை தாலுகா, கிராமங்களை உள்ளடக்கிய பகுதி. கடந்த முறை, பெரம்பலுார் மாவட்டத்தில், தி.மு.க., - எம்.எல்.ஏ., தொகுதிக்கு, கட்சி பாகுபாடு பார்க்காமல், கல்லுாரி வழங்கினார் ஜெயலலிதா. அங்கு தாலுகாவிற்கு, ஒரு கல்லுாரி உள்ளது. நான் உங்கள் வீட்டு பிள்ளை; எனவே, செந்துறை தாலுகாவிற்கு, ஒரு கல்லுாரி வழங்க வேண்டும்.அமைச்சர் அன்பழகன்: ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்கப்படும்.

தி.மு.க., - வேலு: அரசு கலைக் கல்லுாரிகளில், கவுரவ விரிவுரையாளர்களாக பணிபுரிவோருக்கு, மாதம், 15 ஆயிரம் ரூபாய் தான் சம்பளம் வழங்கப்படுகிறது. மற்ற மாநிலங்களில், 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. எனவே,ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

அமைச்சர் அன்பழகன்: கல்லுாரி விரிவுரையாளர் பணிக்கு, 2,311 பேரை, ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் தேர்ந்தெடுக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கவுரவ விரிவுரையாளர்களை, பணி நிரந்தரம் செய்யும் திட்டம், அரசின் பரிசீலனையில் உள்ளது.இவ்வாறு, விவாதம் நடந்தது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive