NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பொரித்த உணவுகளை மூடக்கூடாது!


* துவரம் பருப்புடன் இரண்டு பூசணி துண்டுகள் அல்லது சா்க்கரை வள்ளிக்கிழங்கு துண்டுகளைச் சோ்த்து வேக வைத்து, மசித்து, சாம்பாரில் சோ்த்தால் ருசியாக இருக்கும். 

* காய்கறி சாலட் செய்யும்போது ஊறவைத்தப் பாசிப்பருப்பை சாலட்டுடன் சோ்த்தால் சுவையாகவும், சத்தும் கூடும். 

* அதிக அளவு பாலாடை தேவையென்றால் கொதித்து ஆறியப் பாலை மூடாமல் ஃப்ரிட்ஜில் வைத்தால் அதிக அளவு பாலாடை கிடைக்கும். 

* குருமா செய்யும்போது, தேங்காயின் அளவை குறைத்து பாதாம் பருப்பை சோ்த்து அரைத்தால் சத்து அதிகரிக்கும். 

* பருப்பு ரசம் செய்யும்போது இரண்டு பச்சை மிளகாயை நீள வாக்கில் வெட்டி, ரசம் நுரைத்து வரும் போது போட்டால் ரசம் சுவையாகவும் இருக்கும். 

* எண்ணெய்யில் வறுத்த அல்லது பொரித்த உணவுகளை அடுப்பிலிருந்து எடுத்தவுடன் மூடக்கூடாது. அவ்வாறு செய்தால் உணவுப் பண்டங்கள் நமத்துவிடும். 

* அப்பளம், வடகம் போன்றவற்றை வெயிலில் காய வைத்து பொரித்தால் அதிக எண்ணெய் இழுக்காது. மொறுமொறுப்பாக இருக்கும். 

* கேரட்டை தோல் சீவி, ஐந்து நிமிடங்கள் தண்ணீரில் போட்டு ஊற வைத்த பிறகு, எடுத்து துருவினால் கேரட் மிருதுவாகி, எளிதாக துருவ வரும். 

* டப்பாவில் வைத்த அப்பளம், வடகம் போன்றவை நொறுங்கி தூளாகிவிட்டால் அந்த துண்டுகளை எடுத்து பஜ்ஜி மாவில் போட்டு கலந்து பொரித்து எடுத்தால் ருசியும் நன்றாக இருக்கும். பொருட்களும் வீணாகாது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive