NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 29.03 2022

 திருக்குறள் :

பால் : பொருட் பால், 

இயல் - நட்பியல், 

அதிகாரம் :இகல்,

 குறள் :, 858 

இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் அதனை
மிக்லூக்கின் ஊக்குமாம் கேடு.

 பொருள்
மனத்தில் தோன்றும் மாறுபாட்டை எதிர்கொண்டு நீக்கிக் கொண்டால் நன்மையும், அதற்கு மாறாக அதனை மிகுதியாக ஊக்கப்படுத்தி வளர்த்துக் கொண்டால் தீமையும் விளையும்.

பழமொழி :

Procrastination is the thief of time

இன்றைக்கு என்பதும், நாளைக்கு என்பதும் இல்லை என்பதற்கு அடையாளம்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. எல்லாரும் நம்பினாலும் பொய் பொய் தான் ஒருவரும் நம்பாவிட்டாலும் உண்மை உண்மை தான் எனவே எப்போதும் உண்மையே கூறுவேன். 

2.கவனச் சிதறல் என் வாழ்வை கெடுக்கும் எனவே கவனத்தோடு என் காரியங்களைச் செய்வேன்.

பொன்மொழி :

ம‌ணி கணக்கில் உபதேசம் செய்வது விட ஒரு கண பொழுதாயினும் உதவி செய்வது மேல்.

பொது அறிவு :

1. வெங்காயத்தில் அதிகளவு உள்ள வைட்டமின் எது? 

வைட்டமின் B. 

2. நெல் பயிரிடும் போது நிலத்தில் வெளியாகும் வாயு எது? 

மீத்தேன்.

English words & meanings :

Altar - raised center of worship, தொழுகை செய்யும் இடம், 

alter - to change, மாற்றி அமைப்பது

ஆரோக்ய வாழ்வு :

கம்பு நார்ச்சத்து மிகுந்த உணவு. இதில் கொழுப்பு குறைவாக உள்ளது. இந்த கம்மங்கூழை குடித்து வந்தால் உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகள் கரைந்து உடல் எடை குறைய கூடும். உடல் எடையை குறைக்க விரும்பினால் தினசரி ஒருவேளை கம்பு உள்ள உணவை எடுத்துக்கொள்வதன் மூலம் பலன் கிடைக்கும். கம்பு நமது உடலை பல நோய்களின் தாக்கத்தில் இருந்து காக்கிறது. வயிறு சம்பந்தமான குறைபாடுகளை சரிசெய்யும். குடல் புற்றை தடுக்கிறது. முதுமை அடைவதைத் தாமதப்படுத்துகிறது. மாதவிடாய் பிரச்சனைகள், ரத்த கொதிப்பு, முடி கொட்டுதல், போன்றவற்றையும் சரி செய்கிறது.




கணினி யுகம் :

Shift F3 - Change case. 

 Ctrl backspace - Delete a word    

நீதிக்கதை


அற்புதமான சிற்பி

ஓர் அற்புதமான சிற்பி, ஒருநாள் தெருவில் போய் கொண்டிருந்தவர் ஒரு கடையருகே கனத்த பாறாங்கல் ஒன்றைப் பார்த்தார். ஏதோ பெரிய புதையலைப் பார்த்த மகிழ்ச்சி, அதன் பின் அந்தக் கடைக்காரரிடம், ஐயா, இந்தப் பாறாங்கல் தங்களுக்குத் தேவையா? அல்லது இதை நான் எடுத்துச் செல்லலாமா? என்று கேட்டார். தாராளமாய் எடுத்துச் செல்லுங்கள். இது இந்த இடத்தில் பெரிய இடையூறாய்க் கிடக்கிறது. போவோர் வருவோரெல்லாம் இடறி விழுகின்றனர்! என்றார் கடைக்காரர்.

பாறாங்கல்லை உருட்டிச் சென்ற அந்த சிற்பி, அதை நுட்பமாகச் செதுக்கி அற்புதமான கடவுள் சிலை ஒன்றை உருவாக்கினார். அந்தச் சிலை கடைத்தெருவில் விலைக்கு வந்தது. போட்டி போட்டுக் கொண்டு மக்கள் அதை விலைக்குக் கேட்டானர். அப்படிக் கேட்டவர்களுள் கல்லைக் கொடுத்த கடைக்காரரும் ஒருவர். முடிவில் அந்தக் கடைக்காரரே அதிக விலை கொடுத்து அந்தச் சிலையைப் பெற்றுக் கொண்டார்.

அந்த சிற்பியை மறந்துவிட்ட அந்தக் கடைக்காரர், இந்த அற்புதமான சிலைக்குரிய கல்லை எந்த மலையிலிருந்து எடுத்து வந்தீர்கள்? என்று கேட்டார். அதற்கு சிற்பி, வேறு எங்கிருந்தும் இல்லை. தங்கள் கடை வாசலில் தான் இதைக் கண்டெடுத்தேன். என்னை நினைவில்லையா தங்களுக்கு? ஆறு மாதங்களுக்கு முன் இடையூறாய்க் கிடக்கிறது என்று சொல்லி என்னிடம் நீங்கள் கொடுத்த கல் தான் இது என்றார். கடைக்காரர் வியந்தார். ஆம். தங்கள் பார்வையில் இது தடைக் கல்லாய்த் தெரிந்தது. என் பார்வையில் கடவுளை பொதிந்து வைத்திருக்கும் சிற்பக் கல்லாய்த் தெரிந்தது. வேண்டாத பகுதியையெல்லாம் செதுக்கி எடுத்தேன். உள்ளே இருந்த கடவுளின் உருவம் வெளிப்பட்டது! என்றார். தேவையற்ற சிந்தனைகளை நீக்கினால், பிறர் போற்றும்படியான வாழ்வை பெற முடியும்.

இன்றைய செய்திகள்

29.03.22

★மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் மேற்கொண்டுள்ள இரண்டு நாள் பொது வேலைநிறுத்தப் போராட்டத்தால், முதல் நாளான இன்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பேருந்து மற்றும் வங்கி சேவைகள் கடுமையாக பாதிக்கப்ப்டடன.

★தமிழக காவல் துறையின் சைபர்க்ரைம் பிரிவில், சமூக வலைதளங்களைக் கண்காணிக்க இஸ்ரேல் தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

★மாற்றுத் திறனாளிகளுக்கான உதவி உபகரணங்களின் மாதிரிகளை தேர்வு செய்ய புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த திட்டத்தை செயல்படுத்த நடப்பாண்டில் ரூ.9.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

★சிஏ எனப்படும் கணக்குத்தணிக்கை குறித்த படிப்புகளுக்கான பாடத்திட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு உலகத் தரத்திற்கு மாறுகிறது.

★2 நாள் பாரத் பந்த்; பல மாநிலங்களில் பாதிப்பு; தொழிற்சங்கத்தினர் போராட்டம்.

★தரையிலிருந்து வான் இலக்கை தாக்கும் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா.

★கொரோனா 4-வது அலை: சீனாவின் மிகப்பெரிய நகரமான ஷாங்காய் நகரின் பெரும்பாலான பகுதிகளில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது.

★இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி.

★ஈரோட்டில் நடந்த மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டியில் 350 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். 

★உலக டேபிள் டென்னிஸ்; இந்திய வீரர் சத்தியன் 2வது சுற்றில் வெற்றி.

Today's Headlines


 ★ The normal life of the people in various districts of Tamil Nadu has been affected due to the two day all India strike by the trade unions across the country condemning the Central Government.  Bus and banking services were particularly hard hit.

 ★ Israeli technology has been introduced in the Cybercrime Division of the Tamil Nadu Police to monitor social networking sites.

 ★ A new program has been introduced to select models of assistive devices for the disabled.  In addition, Rs. 9.50 crore has been allocated for the implementation of this project.

 ★ Changes in the syllabus for Charted Account courses called CA are introduced and this make the course world class.

 ★ 2 day Bharat Bandh;  Vulnerability in several states;  The trade unions had strike in many places .

 ★ India successfully tested ground-to-air missile

 ★ Corona 4th wave: Lockdown has been implemented in most parts of Shanghai, the largest city in China.

 ★ West Indies win last Test against England.

 ★ 350 students participated in the district level cricket competition held in Erode.

 ★ World table tennis;  Indian player Satyan wins 2nd round
 Prepared by

Covai women ICT_போதிமரம்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive