இவர்கள்
கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக பணி நிரந்தரம் கோரி பல்வேறு போராட்டங்களை
நடத்தியுள்ளனர். கடந்த ஆட்சியில் நிரந்தரம் செய்ய முடியாது என்று மறுத்து
வந்தனர்.
இந்நிலையில், திமுக தனது தேர்தல் அறிக்கையில் பகுதி நேர ஆசிரியர்களை பணி
நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற உறுதி அளித்தது. மிகுந்த நம்பிக்கையுடன்
வாக்களித்து வெற்றி பெறச் செய்த திமுக, ஆட்சிப் பொறுப்பேற்று 11
மாதங்களாகியும் ' நிதி நிலையை கருத்தில் கொண்டு படிப்படியாக
நிறைவேற்றப்படும்' என்று மட்டுமே கூறி வருகிறது.
தற்பொழுதும் ஆளும் கட்சியை ஆதரித்து பல்வேறு கவனயீர்ப்பு போராட்டங்கள்
நடத்தப்பட்டுள்ளன. மேலும், இவர்களுக்கு மற்ற ஆசிரியர்களுக்கு
வழங்கப்படுவது போல் பணிக் குறிப்பேடு, கொடை ஊதியம், பணி மாறுதல், விடுப்பு
மற்றும் மகப்பேறு விடுப்பு, தேர்தல் பணி போன்ற அனைத்துச் சலுகைகளும்
தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது. 2022ல் மே மாதம் பள்ளி இருந்தும் ஊதியம்
கிடையாது பணியும் கிடையாது என்று அறிவித்துள்ளது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சட்டமன்ற மானியக் கோரிக்கை விவாதத்திலும்
இது பற்றி எதுவுமே கூறப்படாதது பகுதிநேர ஆசிரியர்கள் மத்தியில் பெரும்
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொடர் புறக்கணிப்பினால் அனைவரும் மிகுந்த மனநலப் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
எனவே,
பகுதிநேர ஆசிரியர்கள் தங்கள் வாழ்வாதார உரிமையை மீட்க வரும் 05.05.2022
வியாழன் டிபிஐ வளாகம் சென்னையில் தமிழகம் முழுவதிலுமிருந்து பெருந்திரளாகக்
கூடி உச்சகட்டப் போராட்டமான மாபெரும் உண்ணாவிரத போராட்டத்தை
அறிவித்துள்ளது.
இதன்
அடிப்படையிலாவது தமிழக அரசு கவனத்துடன் பரிசீலித்து அறிவிப்பு வெளியிட்டு
பணி நிரந்தரம் செய்யுமா? என்று மிகுந்த ஏக்கத்துடன் வறுமையில் வாடும்
பகுதிநேர ஆசிரியர்கள் காத்திருக்கின்றனர்.
விடியல் அரசினால் விடியுமா?பகுதிநேர ஆசிரியர்கள் வாழ்க்கை...
பொன். சங்கர்
செய்தித் தொடர்பாளர்,
திருப்பூர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...