NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 17.04.2023

  

 திருக்குறள் :

பால் :அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்: வெஃகாமை

குறள் எண்: 175
அஃகி யகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின்.

பொருள்:
கலைஞர் உரை :
யாராயிருப்பினும் அவரது உடைமையை அறவழிக்குப் புறம்பாகக் கவர விரும்பினால் ஒருவருக்குப் பகுத்துணரும் நுண்ணிய அறிவு இருந்துதான் என்ன பயன்?

பழமொழி :

Accept if the counsel be good no matter who gave it.

அறிவுரை நல்லதாய் இருப்பின் யாராயினும் கேள் .

இரண்டொழுக்க பண்புகள் :

1. தனக்கு தலைவன் இல்லா விட்டாலும் வரிசையாக சென்று தன் பணியைச் செய்யும் எறும்பு போல் இருப்பேன். 

2. ஆசிரியர் இருந்தாலும் இல்லாவிடடாலும் என் ஒழுக்கம் காத்துக் கொள்வேன்.

பொன்மொழி :

மனிதன் பிறக்கும் போது, வெற்றுத்தாள் போல் தான் பிறக்கின்றான். இவ்வுலகில் அவன் கண்டு, கேட்டு உற்று அறியும் சம்பவங்கள் மூலம், மெல்ல மெல்ல அவன் நல்லது, கெட்டது பகுத்தறியும் திறன் பெறுகிறான்.

பொது அறிவு :

1. தமிழர்கள் அதிகமாக வாழும் தென்னாப்பிரிக்க நகரம் எது? 

 டர்பன் . 

 2. உலகிலேயே மிகவும் ஆழமான ஏரி எது?

 பைகால்.

English words & meanings :

 quintuplets - 5 children born at the same time. noun. ஒரே தடவையில் பிறக்கும் 5 குழந்தைகள். பெயர்ச் சொல்

ஆரோக்கிய வாழ்வு

கறிவேப்பிலையில் நார்ச்சத்து அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது. இது செரிமானத்தை இலகுவாக்குகிறது மற்றும் விரைவாக வளர்சிதை மாற்றமடைய உதவுகிறது. இதனால், உங்கள் உடல் எடையும் இரத்த சர்க்கரையும் கட்டுக்குள் இருக்கும். கறிவேப்பிலை உங்கள் இன்சுலின் செயல்பாட்டை அதிகரிக்க முனைகிறது மற்றும் உடல் இன்சுலினை சரியாக பயன்படுத்தும் போது, இரத்த சர்க்கரை அளவு சீராகும்.




ஏப்ரல் 17 

ஈமோஃபீலியா (Haemophilia அல்லது Hemophilia) என்பது, மனித உடலில் குருதி உறையாமல் போகும் பரம்பரை நோயின் பெயராகும். மரபணு குறைபாடுகளின் காரணமாக (அல்லது, மிக அரிதான சமயங்களில், தன்னுடல் தாக்குநோய் (autoimmune disorder) காரணமாக இரத்தத்தை உறையச் செய்யும் குருதி நீர்மக் (Plasma) காரணிகளின் செயல்பாடு குன்றுவதால், இந் நோய் உண்டாகிறது.[1] உடலில், உள் மற்றும் வெளிக் காயங்கள் ஏற்படும் போது இரத்தம் உறையாமல் தொடர்ந்து குருதிப்பெருக்கு ஏற்படுவதால் உயிர் அபாயம் உள்ள நோய்களில் இதுவும் ஒன்று.

நீதிக்கதை

கதை :

கந்தசாமி திருநின்றவூரில் பல ஆண்டுகளாக ஒரு ஜவுளிக்கடை நடத்தி வந்தார். கடைத்தெருவில் அவருடைய ஒரு ஜவுளிக்கடை மட்டுமே இருந்ததால், நகரத்து மக்கள் அவரது கடையிலிருந்தே துணிமணிகள் வாங்கி வந்தனர். கந்தசாமி வியாபாரத்தை சிறப்பாக செய்து ஏராளமாக செல்வம் சேர்த்தார். 


ஒருநாள் அதே கடைத்தெருவில் அவருக்குப் போட்டியாக மாணிக்கம் என்ற வெளியூர் இளைஞன் ஜவுளிக்கடையைத் திறந்தான். இளைஞர்களையும், பெண்களையும் கவரும் படி புதிய வகை துணிகளை அவன் விற்பனை செய்ததால், மக்கள் அங்கு குவிந்தனர். கந்தசாமியின் வியாபாரம் மந்தமாகியது. 


மாணிக்கத்தின் மீது பொறாமை கொண்ட கந்தசாமி, அவன் வியாபாரத்தைத் தடுப்பதற்காக, விலை உயர்ந்த நவீன துணிமணிகளை இறக்குமதி செய்தார். கடையையும் பெரிதாக்கி, கண்கவரும் வகையில் அலங்காரம் செய்தார். சினிமா கலைஞர்களை வரவழைத்து தன் கடைக்கு விளம்பரம் செய்தார். இதனால் அவரது சொத்துக்கள் பெருமளவில் கரைந்தன. ஆனாலும் குறைந்த லாபத்தில் அதிக விற்பனை என்ற கொள்கையைக் கொண்டிருந்த மாணிக்கத்தின் கடையில் தான் அதிகமாக வியாபாரம் நடந்தது. 


இதைக் கண்டு கொதித்த கந்தசாமி வேறு வழியின்றி மிகக் குறைந்த லாபத்துக்கு துணிகளை விற்க முன்வந்தார். பல லட்ச ரூபாய் செலவுகளோடு விற்பனையை கணக்கிட்டுப் பார்த்தால், கடைசியில் நஷ்டம் தான் மிஞ்சியது. உடனே மாணிக்கத்தின் மீது பொறாமை கண்மூடித்தனமாக அதிகரிக்க, அவர் தன் சிந்திக்கும் திறனை இழந்தார். மாணிக்கத்தின் கடைக்கு தீ வைக்க, ஒரு கூலிப் படையை ஏவினார். 


ஒருநாள் இரவு மாணிக்கத்தின் கடை தீப்பிடித்து எரிந்தது. அங்கிருந்த துணிமணிகள், பணம் என அனைத்தும் சாம்பலான பின்தான் கந்தசாமியின் மனது நிம்மதி அடைந்தது. ஆனால் மாணிக்கம் கொடுத்த புகாரின் பேரில் தீவிர விசாரணை நடத்திய காவல் துறையினர், தீ வைத்த கூலிப் படையினரை கைது செய்து விசாரித்தனர். அவர்கள் கந்தசாமியைக் காட்டிக் கொடுத்ததால், அவர் சிறையிலடைக்கப்பட்டார். கந்தசாமியின் கடை சீல் வைக்கப்பட்டது. 


மாணிக்கம் தன் கடையை காப்பீடு செய்திருந்ததால், இழப்புத் தொகை கிடைத்தது, மீண்டும் வியாபாரத்தைத் தொடர்ந்தான். பொறாமையால் அறிவுக்கண் மூடப்பட்டு தீய வழியில் சென்று வெற்றி பெற நினைத்தால், கடைசியில் பெரும் துன்பத்தையே சந்திக்க நேரிடும். 


நீதி :

பொறாமை தன்னிடம் உள்ள சொத்தையும் சேர்த்து அழித்துவிடும்.

இன்றைய செய்திகள்

17.04. 2023

* கிருஷ்ணகிரி அருகே பறை இசை கலைஞர்களுக்காக அமைக்கப்பட்ட 17ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல் கண்டுபிடிப்பு.

* சென்னை- தென்பிராந்திய  ராணுவ அதிகாரியாக லெப்டினென்ட் ஜெனரல் கரன்பீர் சிங் பிரார் பொறுப்பேற்றுக் கொண்டார்.

* சிந்து சமவெளி பண்பாட்டுக்கு சொந்தம் கொண்டாடும் உரிமை தமிழுக்கே உள்ளது என்பதை ஆய்வுகள் கூறுகின்றன என்று சென்னையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்.

* மத்திய ஆயுதக் காவல் படைகளின் (சிஏபிஎஃப்) எழுத்து தேர்வு இனிமேல் இந்தி, ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ் உள்ளிட்ட 13 மாநில மொழிகளிலும் நடத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

* கலவர பூமி ஆன சூடான்: விமான நிலையத்தைக் கைப்பற்றிய துணை ராணுவப் படை; இந்தியர்களுக்கு எச்சரிக்கை.

* தேசிய மாஸ்டர் தடகள போட்டியில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி உதவி பேராசிரியர் 2 தங்கம் வென்றார்.

* இஷன் கிஷன் அதிரடி. 5 -விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி.

* சேப்பாக்கத்தில் 21ம் தேதி நடைபெறும் ஐபிஎல் போட்டிக்கு வரும் 18ம் தேதி டிக்கெட் விற்பனை தொடக்கம்.

Today's Headlines

* A 17th-century midden found near Krishnagiri for parai drum musicians.

* Chennai- Lieutenant General Karanbir Singh Brar has taken charge as the South Regional Army Officer.

 * Chief Minister M.K.Stalin was proud at the book launch ceremony held in Chennai that studies show that Tamils ​​have the right to celebrate the culture of the Indus Valley.

 * The Central Armed Police Forces (CAPF) written test will henceforth be conducted in 13 state languages ​​including Tamil besides Hindi and English, the Union Home Ministry has announced.

 * Sudan in turmoil: Paramilitary force seizes airport;  Warning to Indians.

* Dr. Sivanthi Aditanar, Assistant Professor, College of Physical Education, won 2 gold medals in the National Masters Athletics Competition.

 * Ishan Kishan action.  Mumbai Indians won by 5 wickets.

 * Ticket sales will start on 18th for the IPL match to be held on 21st in Chepauk.
 Prepared by

Covai women ICT_போதிமரம்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive