![]() |
| நீல் ஆல்டன் ஆம்ஸ்ட்ராங் |
You reap what you sow.
நீ எதை விதைத்தாயோ அதையே அறுவடையாகப் பெறுவாய்.
இரண்டொழுக்க பண்புகள் :
1.எல்லோருக்கும் உதவி செய்வது உன்னதமான வாழ்க்கை.
2.எனவே என்னால் இயன்ற அளவு உதவி செய்வேன்.
பொன்மொழி :
அன்பில்லா வாழ்க்கை என்பது பூக்கள் அல்லது பழம் இல்லாத மரத்தை போன்றது.
* கலில் ஜிப்ரான்*
பொது அறிவு :
01. நியூ இந்தியா என்ற பத்திரிக்கையை தொடங்கியவர் யார்
02. உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது என்ன?
English words :
authentic – to understand that the given object or idea is real or genuine. மெய்யானதாக அல்லது போலியல்லாததாக அறியப்பட்ட
Grammar Tips:
அறிவியல் களஞ்சியம் :
1543-ஆம் ஆண்டில் வெசலியஸ் மனித உடலின் அமைப்புப் பற்றிய மிக முக்கியமான நூலான டி யுமானி கார்போரிஸ் வெப்ரிகா (De Humani Corporis Fabrica) என்பதனை வெளியிட்டார். உயிரியல் ஓர் அறிவியலாக வளர்வதற்கான முன்னறிவிப்பைத் தெரிவித்த இந்த நூல், தசைகளின் பிரிவுகளுக்கான டைட்டியனின் (titian) மாணவர் ஜோன் ஸ்டீபன் வேன்கால்கார் (Jan Stephen van calcar) என்பவரால் வரையப்பட்ட வரைபடங்களைக் கொண்டுள்ளது.
ஆகஸ்ட் 05
நீதிக்கதை
வாய்மையே வெல்லும்
ஒரு ஊரில் கஞ்சன் ஒருவன் இருந்தான். அவன் மிகவும் கஞ்சமாக செலவு செய்வான். யாருக்கும் உதவி செய்யாதவன், அவனுக்கு ஒரு நாள் அவன் வீட்டுத் தோட்டத்தில் உள்ள வேப்பமரத்திற்கு அடியில் புதையல் இருப்பது போல கனவு வந்தது.
தூக்கத்திலிருந்து கஞ்சன் எழுந்து புதையலை எடுக்க நினைத்தான். பகலில் சென்றால் பிறருக்கு தெரிந்துவிடும் என்று நினைத்து இரவில் புதையலை எடுக்க சென்றான். அப்போது, அங்கிருந்த நல்ல பாம்பு ஒன்று அவனைக் கடித்துவிட்டது. விஷம் ஏறியது. விஷக்கடி மந்திரவாதியிடம் ஓடினான் கஞ்சன். அவர் தன்னிடம் வரும் நோயாளிக்கு மந்திரம் சொல்லியே நோயைக் குணமாக்குவார்.
பூரான் கடிக்கு - 5 ரூபாய், தேள் கடிக்கு - 10 ரூபாய், பாம்பு கடிக்கு - 25 ரூபாய்
உனக்கு என்ன கடித்தது என்றார் மந்திரவாதி. அந்த நேரத்தில் கஞ்சன் எந்த கடியானாலும் ஒரே மந்திரம் தானே சொல்லப் போகிறார் என்று நினைத்து பாம்பு கடித்தது என்று சொல்லி அதிக காசு கொடுக்க வேண்டும் என்று கஞ்சமாக யோசித்து பூரான் கடித்து விட்டது என்று பொய் கூறினான்.
மந்திரவாதி பூரான்கடி மந்திரத்தை சொல்ல, பயன் இல்லை. மீண்டும் வைத்தியரே எனக்கு தேள் கடித்து விட்டது என்றான். மந்திரவாதி தேள்கடி மந்திரத்தை சொன்னார், இப்போதும் எந்த பயனும் இல்லை.
பயந்து போன கஞ்சன் மெதுவாக, பா, பா பாம்பு கடித்தது என்றான். அவன் சொல்லி முடிப்பதற்குள் விஷம் தலைக்கு ஏறி இறந்து விட்டான்.
நீதி :
அளவுக்கு மீறின கஞ்சம் உயிரினை எடுக்கும்.
இன்றைய செய்திகள்








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...