ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் சிலர் போலி சான்றிதழ் கொடுத்து வேலையில் சேர்ந்திருப்பது தெரிய வந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
பள்ளிக் கல்வித் துறையில் போலி கல்விச் சான்றிதழ்களை கொடுத்து ஆசிரியர்களாகவும், ஆசிரியர் அல்லாத ஊழியர்களாகவும் பலர் பணியாற்றுவதாக, பள்ளிக் கல்வித்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
பொதுவாக அரசு துறையில் புதிதாக ஒருவர் சேர நேர்ந்தால், அவருடைய அனைத்து வகை கல்வி சான்றிதழ்களும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி ஆய்வுக்கு உட்படுத்தப்படும் . அந்த ஆய்வில் சான்றிதழ்கள் அனைத்தும் உண்மை என்று தெரிய வந்த பிறகு அவர் முறையான அரசு ஊழியராக அங்கீகரிக்கப்படுவார்.
அதுவே, சான்றிதழ்கள் போலி என தெரிய வந்தால், உடனடியாக அவர் பணி நீக்கம் செய்வதோடு, அவருக்கு வழங்கப்பட்ட சம்பள பணத்தை பிடித்தம் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் ஆனால், அரசு பணிகளில் புதிதாக சேரக்கூடியவர்களின் கல்விச் சான்றிதழ்கள் உடனுக்குடன் அதன் உண்மை தன்மையை பரிசோதனை செய்யாததன் காரணமாக, பலர் ஆண்டு கணக்கில் போலிச் சான்றிதழ்களை கொடுத்து பணிபுரிவதாக கூறப்படுகிறது.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...