Life begins with self - belief.
தன்னம்பிக்கையில் தான் வாழ்க்கை ஆரம்பமாகிறது.
இரண்டொழுக்க பண்புகள் :
1. மலருக்கு மணம் அவசியம் போல மனிதனுக்கு குணம் முக்கியம்.
2. எனவே மனிதரின் குணங்களை வைத்தே அவர்களை மதிப்பிடுவேன்.
பொன்மொழி :
முதலில் மனிதன் குடிக்க ஆரம்பிக்கிறான் பின்னர் அது அவனை குடிக்க ஆரம்பிக்கிறது சிங்லெயிர் லூயிஸ்
பொது அறிவு : 1
.உலகின் மிகப்பெரிய செயலில் உள்ள எரிமலை எது?
அமெரிக்கா-மௌனா லோவா America - Mauna Loa
02.தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவிலை கட்டியவர் யார்?
இரண்டாம் இராசராசன்
Rajaraja Chola II
English words :
Jammed-stucked,
Creased- having unwanted lines or folds
தமிழ் இலக்கணம்:
அறிவியல் களஞ்சியம் :
அமெரிக்காவின் 'நாசா', ஐரோப்பிய விண்வெளி மையம் இணைந்து சமீபத்தில் 'சென்டினல் - 6பி' செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது. இது கடல்நீர்மட்ட உயர்வை கண்காணித்தல், கடல் வெப்பநிலை, புயல் கண்காணிப்பு, கட்டமைப்புகளை பாதுகாத்தல், கடலோர சமூக திட்டமிடலுக்கு பயன்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள் வழங்கும் தகவலால் இந்திய கடலோர மக்களும் பயனடைவர் என வானியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பொதுவாக சாரசரி கடல்நீர்மட்ட உயர்வு என்பது ஒவ்வொரு பகுதிக்கும் வேறுபடும்.
நீதிக்கதை
துணிவு மிக்க சிறுவன்
கொல்கத்தாவில் ஒரு நாடக அரங்கத்தில் நாடகம் நடந்து கொண்டிருந்தது. மக்கள் நாடகக் காட்சிகளில் மனத்தைப் பறிகொடுத்து இரசித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது எதிர்பாராத வகையில் திடீரென்று நாடக மேடையில் ஒரு காட்சி. அதில் நாடகத்திற்கு ஒரு சிறிதும் தொடர்பில்லாத பாத்திரங்கள் நாடக மேடையில் தோன்றினர். அதைத் தொடர்ந்து நாடக மேடையிலும் மக்களிடமும் சலசலப்பு எழுந்தது.
விஷயம் இதுதான் நாடகத்தில் முக்கியப் பாத்திரம் ஏற்று நடித்துக் கொண்டிருந்த நடிகர்களில் ஒருவர், எவரிடமோ பணம் கடன் வாங்கியிருந்தார். அது காரணமாக அந்த நடிகரைக் கைது செய்யும் பொருட்டு, ஆங்கிலேயப் போலீசார் கையில் வாரண்டுடன் நாடக மேடைக்கே சென்றுவிட்டனர். இந்த விஷயம் நாடகம் பார்க்க வந்திருந்த பொதுமக்களுக்குத் தெரிய வந்தது. ஆனால் அவர்கள் அனைவரும் மறுப்பு எதுவும் தெரிவிக்காமல் மௌனமாக இருந்தனர்.
அப்போது ஒரு சிறுவனின் குரல், போலீஸ்காரரை நோக்கி இடி போன்று அங்கே முழங்கியது. மேடையை விட்டு வெளியே போ! நடிகரைக் கைது செய்யும் உன் வேலையை நாடகம் முடிந்தபிறகு வைத்துக்கொள்! நாடகத்தின் இடையில் புகுந்து பொதுமக்களைத் தொந்தரவு செய்யாதே! என்று அந்தச் சிறுவனின் குரல் திட்டவட்டமாகவும், போலீசாருக்குக் கட்டளை பிறப்பிப்பது போலவும் கணீரென்று ஒலித்தது. அதைக் கேட்டுப் போலீசாரே திடுக்கிட்டு விட்டனர். அதற்குள் சிறுவன் கூறியதை ஆமோதித்துப் பொதுமக்களும் ஒருமித்த குரலில் போலீசாரை நோக்கி, மேடையை விட்டுக் கீழே இறங்கு! நாடகம் முடியும் வரையில் காத்திருந்து நடிகரைக் கைது செய்துகொள்! என்று கூறினார்கள்.
பெருத்த எதிர்ப்பு எழுந்ததால், போலீசாரும் அவ்விதமே நடந்து கொள்ளும்படி ஆயிற்று. பொதுமக்கள் சரியான சமயத்தில் குரலெழுப்பிய சிறுவனைப் பாராட்டினார்கள். இது நடந்த சமயத்தில் துணிவு மிக்க அந்தச் சிறுவனுக்கு வயது பதினான்கு. பிற்காலத்தில் அந்தச் சிறுவன் வளர்ந்து பெரியவனானபோது, அஞ்சாமை என்ற கருத்தை ஆணித்தரமாக இந்திய மக்களுக்குப் போதித்தான். ஆம், பிற்காலத்தில் சுவாமி விவேகானந்தராக மலர்ந்த நரேந்திரன்தான் அந்தச் சிறுவன்.
இன்றைய செய்திகள்








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...