தேசிய வருவாய் வழி மற்றும் திறன்படிப்பு (NMMS) உதவித் தொகைக்கான 2026 தேர்வை பிப்ரவரி மாதத்தில் நடத்திடுக!
தோழர்.இரா.சச்சிதானந்தம்.
திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர்
இது குறித்து, மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது:
2025-26 ஆம் ஆண்டிற்கான வருவாய் வழி மற்றும் தகுதிப்படிப்பு உதவித்தொகை திட்டத் தேர்வு (NMMS). 10.01.2026 சனிக்கிழமை அன்று நடைபெற உள்ளதாக பார்வை 1ன் மூலமாக அரசுத் தேர்வுத் துறை இயக்குநர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் இத்தேர்வானது பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் நடைபெறும். தற்போது அரையாண்டுத் தேர்வில் மாணவர்கள் விடுமுறையில் உள்ளனர். விடுமுறை முடிந்து ஒரு சில தினங்களிலேயே தேர்வு என்பதால் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பயிற்சி அளிக்க போதுமான நாட்கள் இல்லை. இதனால் கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் இத்தேர்வை எதிர்கொள்வது கடினமானதாக இருக்கும். எனவே, கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களின் நலன் கருதி வழக்கமாக தேர்வு நடைபெறும் பிப்ரவரி மாத இறுதியில் தேர்வினை நடத்த தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...